வாகனங்களில் ”ஸ்பீட் கன்ட்ரோல் டிவைஸ்” - மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விபத்து இழப்பீடு கோரிய வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா என கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு எத்தனை விபத்துக்கள் நேரிட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு கருவி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.