வாழைத்தாரும் வயநாடு மழையும்..!
சென்னை: கடும் கடுப்புடன் இருக்கும்போது பேஸ்புக் பக்கமோ, வாட்ஸ் ஆப் பக்கமோ ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்தால் போதும்.. மனசெல்லாம் சில்லுன்னு கூலாய்டும்.. காரணம், அங்கே கொட்டிக் கிடக்கும் கிச்சுகிச்சு மூட்டும் சில படங்களும், டயலாக்குகளும்தான்.
என்னதான் சமூக வலைதளங்கள் போரடிப்பதாக சிலர் அங்கலாய்த்தாலும் கூட, இன்னும் கூட அங்கே நிறைய சுவாரஸ்யங்கள் உலாவிக் கொண்டுதான் உள்ளன.
சில படங்களைப் பார்க்கும்போது அடடே என்று ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவை உண்மையா அல்லது போட்டோஷாப்பா என்று தெரியாத போதிலும் கூட ரசிக்க வைப்பதாக அவை உள்ளன. அப்படிப்பட்ட சில படங்களைப் பார்க்கலாம் இங்கே.. எல்லாம் வாட்ஸ் ஆப் ரகளைதான்!
ஒருவர் தனது வண்டியைத் தொலைத்து விட்டார். அதை எப்படித் தேடியிருக்கிறார் பாருங்கள், அந்த குசும்புக்கார ஆசாமி...!
செல்போனுக்கு சார்ஜ் போடனும். சில பல சிக்கல்கள். இந்த ஐடியா எப்படி.. ஷாக்கிங்கா இருக்கா....! ஆனால், செல்போன் எப்படி அழகாக பார்க்கிங் ஆகியிருக்கு பாருங்கள்... அங்க வச்சிருக்காரு இந்த ஐடியாக்காரர் தனது மூளையை!
இது எதிர்காலத்தில் கிராசரி ஷாப்களில் இதுபோல பல ஐட்டங்களைப் பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது இந்தப் படத்தைப் பார்த்தால்... செம ஐடியாதானே!
எங்க போனாலும் கூடவே வருவேன்னு அடம் பிடிச்சா என்னதான் செய்றது.. சேரைப் போட்டு உக்கார வைக்க வேண்டியதுதான்...!
வாழைத்தாரும் வயநாடு மழையும்.. அப்படின்னு டைட்டில் வைக்கலாம் போல... செம ஐடியா சாரே...!
சார் தப்பா பார்க் பண்ணிட்டாரோன்னு நினைக்கத் தோனும்.. ஆனால் இது அப்படி இல்லை.. சாரோட ஆபீஸே இதுதான்.. செம யோசனை சார்ஜி!