"என்னை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகிறார்”- கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!
திருச்சி: திருச்சியில் மனைவி ஒருவர் தனது கணவனே தன்னை பாலியல் தொழிலுக்கு செல்லுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் விமலா. இவர் சத்தியமங்கலம் அருகிலுள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது பங்களாபுதூர் அருகிலுள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்த சண்முகமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர், 12 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் கணவர் தன்னை பாலியல் தொழிலுக்கு செல்லும்படி அடித்து துன்புறுத்துவதாக கூறி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் விமலா புகார் செய்துள்ளார்.
இப்புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள எஸ்.ஐ சரோஜா இதுகுறித்து விசாரித்து வருகிறார். சண்முகமூர்த்தி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.