For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்காசி: குடிகார கணவனை எரித்து கொலை செய்த மனைவி

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: குடித்து விட்டு வந்து தினசரி அடித்து உதைத்த கணவனை தொந்தரவு தாங்காத மனைவி கொலை செய்து எரித்துள்ள சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட நபரின் பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கீழப்பாவூரில் வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான சிவராம கிருஷ்ணனுக்கும் இதேப் பகுதியை சார்ந்த மல்லிகா என்பவருக்கும் சுமார் 1௦ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Wife kills her husband

சிவராம கிருஷ்ணன் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியை அடிப்பது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்படவே கோபமடைந்த மல்லிகா தனது குழந்தைகளை அருகிலுள்ள தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சிவராம கிருஷ்ணன் வீட்டில் எரிந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் பாவூர் சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்தியதில் சிவராமகிருஷ்ணனை அவரது மனைவி, மற்றும் உறவினர்கள் அடித்து, எரித்து கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து மல்லிகாவை கைது செய்த போலீசார் மோப்ப நாய் உதவியோடு இந்த கொலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் வீட்டிற்குள் ஒருசாக்குப்பை சிக்கியது அதில் ரத்தக்கறை படிந்த துணிமணிகள் இருப்பதும், இதை கொலையாளிகள் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. மனைவியே கணவனை கொடுரமாக கொலை செய்து எரித்து கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A woman arrested by Pavoorchathiram police in connection with husband murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X