சொல்லச் சொல்லக் கேட்காமல் கணவருடன் கள்ளக் காதல்.. பெண்ணின் கழுத்தை அறுத்த மனைவி!
சேலம்: சேலத்தில் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடினார் மனைவி.
தாதக்காப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி கவுதம். இவரது மனைவி பெயர் துர்கா தேவி. அதேசமயம், திலகா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டார் ஜோதி. இது துர்காவுக்குத் தெரிய வந்து பிரச்சினையானது.
கணவரையும், திலகாவையும் கண்டித்தார் துர்கா. ஆனால் இருவரும் கேட்கவில்லை. இதுதொடர்பாக மூன்று பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் திலாகவைத் தேடிப் போனார் துர்கா. அங்கு வைத்து இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது துர்கா,மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலகாவைக் குத்தினார். பின்னர் அவரது கழுத்தையும் அறுத்து விட்டுத் தப்பிவிட்டார்.
படுகாயமடைந்த திலகாவை அக்கம் பக்கத்தினர் சேலம் குகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவாகி விட்ட துர்காவை போலீஸார் தேடி வருகின்றனர்.