அதிமுக வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?.. ஓ.பி.எஸ் கோரிக்கை குறித்து அதிகாரிகள் அவசர ஆலோசனை!
அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்குவது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி அதிமுக பொருளாளரும், முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைதிப் புரட்சியை அரரங்கேற்றியுள்ளார். அது தற்போது நாலாபுறமும் வெடிக்க் தொடங்கியுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கக் கோரி மயிலாப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். தனது உத்தரவு இல்லாமல் கணக்கை இயக்கக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கை குறித்து தற்போது வங்கி அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரின் கோரிக்கையை ஏற்று வங்கிக் கணக்கை முடக்கி வைக்கும் முடிவுக்கு அவர்கள் வரக் கூடும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இந்த வங்கிக் கணக்கிலிருந்து ஒரு பைசாவைக் கூட ஓ.பன்னீர் செல்வத்துக்குத் தெரியாமல் எடுக்க முடியாது. அதிமுக ஸ்தம்பித்துப் போகும்.
குறிப்பாக தற்போது ரிசார்ட் உள்ளிட்ட இடங்களில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களுக்கான செலவுக்கு வங்கியிலிருந்து 5 பைசா கூட எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.