இவர்தான் புறநானூற்று வீரத் தாயோ.. வைரலாகும் மெரினா படம்
சென்னை: இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றிபெற தாய்மார்கள், பெண்கள் பங்களிப்பு அபாரம்.
"உனக்கு எதுக்கு வம்பு.." என்று எல்லா பிரச்சினைக்கும் பிள்ளைகளை தடுத்து வந்த தாய்மார்கள், இப்போது புறனாநூறு தாயாக மாறி, "சென்று வா மகனே, வென்று வா.." என வீரத் திலகமிட்டு அனுப்பி வைக்கிறார்கள்.
இப்படித்தான் மெரினாவில் விடிய, விடிய போராட்டங்கள் நடத்திவரும் ஆண், பெண்களுக்காக, சாப்பாடு கொண்டு வந்து வாயில் ஊட்டி வருகிறார் ஒரு பெண்.
இளைஞர்கள் எந்த ஊர், அவர்கள் பெயர் என்ன, ஜாதி-மதம் என்ன என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல், அந்த பெண் உணவு ஊட்டி வருகிறார். புறநானூற்றில் வரும் ஒரு பாடலில், ஒரு தாய் தனது மகன் போரில் முதுகில் குத்துப்பட்டு இறந்ததாக அறிந்து, தனது மார்பகங்களை அறுத்து எறிவேன் என சூளுரைக்கும் சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கும். நெஞ்சில் வேல் பாய்ந்து இறந்ததை உறுதி செய்து அந்த தாய் பேருவகை அடைவார். இப்போது தமிழக தாய்மார்களும் தங்கள் பழம்பெருமையை மீட்டுவிட்டனர். அதுகுறித்த போட்டோவை இந்த வட இந்திய சிட்டிசன் டிவிட்டரில் ஷேர் செய்து, பெருமிதம் தெரிவித்துள்ளார்.
RT If You Never Ever Saw A Protest With So Much Peace, Humanity, Care & Love For Each Other. Love You Guys! #Jallikattu AMEND PCA ACT SOON pic.twitter.com/cZwuY7iXt6
— Sir Ravindra Jadeja (@SirJadeja) January 20, 2017