பெருந்துறையில் 2 வாரமாக குடிக்க தண்ணீர் இல்லை… காலி குடங்களுடன் சாலை மறியலில் குதித்த பெண்கள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமுற்ற பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு: பெருந்துறை செங்கோடம்பள்ளம் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன.
கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.
காலிக் குடங்களுடன்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள செங்கோடம்பள்ளம் பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் ஈரோடு-பெருந்துறை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குமுறல்
அப்போது பேசிய பெண்கள், குடிநீரை வீட்டிற்கு கொண்டு வர சாலைகளில் சுற்றித் திரிவதாக கூறினார்கள். இதனால் பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
அதிகாரிகள் நடவடிக்கை இல்லை
இரண்டு வாரங்களாக முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்றால் எப்படி அன்றாட வாழ்க்கையை தள்ள முடியும். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஈரோடு பெருந்துறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.