For Quick Alerts
For Daily Alerts
Just In
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி
விருதுநகர்: விருதுநகர் அருகே குருந்தமடம் பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர மின்னல் தாக்கியது. இதில் பாண்டி என்ற தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தொடர் நிகழ்வாக இன்று விருதுநகர் அருகே குருந்தமடத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
A worker was killed in a blast at a fireworks manufacturing unit at Kurunthamadam village near virudhunagar on Tuesday.
Story first published: Tuesday, May 31, 2016, 13:07 [IST]