For Daily Alerts
Just In
அட்வான்ஸ் கேட்டு கொடுக்காத ஆலை அதிபரையும், மகளையும் குத்திக் கொன்ற தொழிலாளர்கள்
சூலூர்: கோயம்பத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தில் அட்வான்ஸ் கேட்டு கொடுக்காததால் ஆலை அதிபரையும், அவரது மகளையும் குத்திக் கொன்ற 3 தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூலூரை அடுத்த குமாரபாளையத்தில் பவர்லூம் வைத்து நடத்தி வந்தவர் ராக்கியப்பன். இவரிடம் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மூவர், நேற்று இரவு வந்து அட்வான்ஸ் கேட்டனர்.
ராக்கியப்பன் மறுக்கவே அவரை கத்தியால் குத்தினர். தடுக்க வந்த மனைவி சரோஜினி, மகள்கள் வினோதினி, யசோதா ஆகியோரையும் குத்தினர். இதில், ராக்கியப்பனும், அவரது மகள் வினோதினியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மற்ற இருவரும் ஆபத்தான நிலையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவான மூன்று தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Workers of a power loom company, murdered mill owner and his daughter for not granting advance payment to them.