மர்மநபர்களால் இளைஞர் வெட்டி கொலை- அம்பை அருகே பதட்டம்: போலீசார் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பிற்காக அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பிரம்மதேசம் மாதஙகோவிலை சேர்ந்தவர் ராஜா. கார் டிரைவராக பணியாற்றி வந்த இவரின் மனைவி பெயர் ஆதிலெட்சுமி. இவர்களுக்கு அனுசுயா என்ற ஒரு வயது மகள் உள்ளார். இவர் அம்பை அகஸ்தியர் கோயிலில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அகஸ்தியர் கோயில் பக்கமுள்ள ஓட்டல் முன்பு புரோட்ட போடும் அடுப்பு அருகே தலை மற்றும் பின்கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த அம்பை டிஎஸ்பி சிவநேசன், இன்ஸ்பெக்டர்கள் பொன்னுசாமி, ஜெர்மின்லதா, சிவமுருகன், மாடசாமி, தாசில்தார் பால்துரை மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டு சினிமா தியேட்டர் வழியாக ரயில் நிலையம் சென்று நின்று விட்டது. ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில் மாலை பைக்கில் ஹெல்மேட் அணிந்து வந்த இருவர் ராஜாவை நைசாக பேசி ஓதுக்குபுறமாக அழைத்து சென்று வாயை பொத்தி வெட்டி கொன்றது தெரிய வந்தது. மேலும் உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ராஜா கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
இது தொடர்பாக பாளை அருகே உள்ள மருதூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்பிற்காக அங்கு அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.