For Daily Alerts
Just In
வீடு தேடி வந்து சில்லறை தரும் தபால் அதிகாரிகள்... பூரிப்பில் தேனி கிராம மக்கள்- வீடியோ
தேனி: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தேனி தலைமை தபால் நிலைய அதிகாரிகள், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிராமங்கள் தோறும் தாங்களே சென்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு உரிய சில்லறை கொடுத்து வருகின்றனர். வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் இல்லாத கிராமங்களில் தபால் நிலைய அதிகாரிகள் இந்த சேவையைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
In Theni district the postal officials have started visiting villages to exchange old notes from the people.
Story first published: Thursday, November 17, 2016, 15:20 [IST]