For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோன் தருவதில் பாராபட்சம்... வங்கி மேலாளரை முற்றுகையிட்ட உதகை கிராம மக்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கீளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து நானூறு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இங்கு உறுப்பினர்களுக்கு உரிய முறையில் கடன் வழங்கப்படுவது இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வங்கி மேலாளரை முற்றுகையிட்ட மக்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரை மக்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் ஓரிரு வாரங்களில் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும் என உயரதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

English summary
Near Ooty, the village people protested against bank officers alleging that they are seeing partiality for giving loans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X