For Daily Alerts
Just In
திருச்சி தோட்டா தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி 20 பேர் பலியான பரிதாபம்- வீடியோ
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையின் இன்று எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் சுமார் 2 கிமீ தூரத்திற்கு சிதறிக் கிடந்ததால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Comments
trichy fire died oneindia tamil videos திருச்சி வெடி விபத்து தொழிலாளர்கள் பலி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Twenty persons were feared killed in a fire at an explosive-making unit at Murugapatti, about 40 km from Trichy today, police said.
Story first published: Thursday, December 1, 2016, 16:01 [IST]