காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறந்துவிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.
Recommended Video
12 மாவட்டங்களின் காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதியன்று நீர் திறந்துவிடுவது வழக்கம். காவிரி நதிநீர் பிரச்சனை, மழை இல்லாத சூழ்நிலை போன்றவற்றால் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்க முடியாத சூழ்நிலைகளும் உருவாகும்.
கடைசியாக 2008-ம் ஆண்டுதான் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 12-ல் இன்று மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீரை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர் 3 நாட்களில் திருச்சி கல்லணையை சென்றடையும்.
டெல்லியில் பேய்க் காற்றுடன் கனமழை.. நொய்டா மேம்பாலத்தில் பெயர் பலகை சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 101.72 அடியாக உள்ளது. தற்போது வினாடிக்கு 3,000 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதுபடிப்படியாக 10,000 கன அடி நீராக அதிகரிக்கப்படும்.