தென் மாவட்டங்களுக்கு கூடுதல் உரம்-அழகிரி நடவடிக்கை
மதுரை: தமிவகத்தின் தென் மாவட்டங்களில் நிலவும் உரத் தட்டுபாட்டை போக்க 5000 மெட்ரின் டன் உரத்தை ஒதுக்கீடு செய்து அமைச்சர் அழகிரி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உரம் ரயில் மூலம் மதுரை வந்தது.
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சரான அழகிரி தான் வென்றக மதுரை தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதியில் நன்றி தெரிவிக்கச் சென்றார்.
அப்போது உரத் தட்டுபாடு நிலவுவது குறித்து விவசாயிகள் அவரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2,500 டன் யூரியாவும், 2,500 மெட்ரிக் டன் டிஏபி உரத்தை தென் மாவட்டங்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உரம் மதுரைக்கு ரயிலில் வந்தது.
இந்த உரம் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு தலா 15 சதவீதம் பகிர்ந்தளிக்கப்படும்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் மதிவாணன் கூறுகையில், இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. தென் மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பு வைக்கப்படும் என்றார்.