For Daily Alerts
Just In
வைகை-பெரியாறு அணைகள் நாளை திறப்பு
மதுரை: முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையிலிருந்து நாளை மாலை தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் எதிர்பாராத வகையில் நல்ல மழை பெய்ததால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 133.10 அடி தண்ணீர் உள்ளது. அதேபோல வைகை அணையில் 70.10 அடி தண்ணீர் உள்ளது.
இந்த இரு அணைகளும் நாளை மாலை 5 மணியளவில் திறக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க ஏற்கனவே முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Saturday, May 31, 2008, 14:00 [IST]