For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணை..100 அடிக்கு 8 அடி பாக்கி!

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து நல்ல நிலையில் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 100 அடியை எட்ட இன்னும் 8 அடியே பாக்கி உள்ளது.

கர்நாடகத்திலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.04 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 29 ஆயிரத்து 536 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 13 ஆயிரத்து 8 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் எனத் தெரிகிறது. இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X