ஆனி மாத பலன்கள்: ஜூன் 14 ஆம் தேதி ஆனி மாதம் பிறந்துள்ளது. இந்த ஆனி மாதம் ஆரம்பிக்கும்போது புதன் தனது சொந்த வீடான மிதுன வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்துள்ளதால் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ள நிலையில் இந்த மாதம் துவங்கவுள்ளது. குரு சுக்கிரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மகர வீட்டை குரு சுக்கிரன் பார்க்கின்றனர். கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் இருக்கின்றனர்.
ஜூன் 22 ஆம் தேதி புதன் சிம்மத்தை நோக்கி வந்து குரு சுக்கிரன் புதன் இணையப் போகிறது. 20 ஆம் தேதியே செவ்வாய் 7 ஆம் பார்வையை விருச்சிகத்துக்கு கொடுக்கப் போகின்றனர். இந்த மாதத்தில் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்புகள் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிக ராசியினருக்கு குரு 5 ஆம் பார்வையாக கடாட்ச பார்வையில் பார்க்கிறார். நினைத்தது, நினைக்காதது, கேட்டது, கேட்காதது எல்லாமே அடுத்தடுத்து உங்களை தேடி வரும். கடந்த 15 வருடங்களாக விருச்சிக ராசிக்கு நன்றாக இல்லை. அஷ்டமத்தில் குரு இருந்ததால் போதும் போதும் என்கிறளவுக்கு கஷ்டங்களை சந்தித்திருப்போம். குரு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரபோகிறார். அதிர்ஷ்டங்கள் கொட்டும். வலிகள் மாறி யோக பலன்கள் அதிகம் கிடைக்கும். காலரை கெத்தாக தூக்கிவிட்டு நடக்குமளவுக்கு வாழ்க்கை பிரகாசமாகும். மனம் தெளிவடைந்து அறிவு அதிகரிக்கும். குரு 3 மற்றும் 5 ஆம் இடங்களை பார்க்கிறார். தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி குவியும். மனதில் நிம்மதி ஏற்படும். நல்ல தூக்கம் கிடைக்கும். ராசிநாதன் ராசியை பார்க்க போகிறார். இது அற்புதமான பலன் குரு பார்வையால் எல்லாவற்றிலும் உங்களின் தனித்திறமையுடன் தடம் பதிப்பீர்கள். சரியான நேரத்தில் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். 20 ஆம் தேதிக்கு பிறகு உங்கள் வாழ்க்கை வேறு மாதிரியாகும். உங்களை ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம், உங்களின் வெற்றியை வியந்து வாயடைத்து பார்ப்பார்கள். வெற்றி மேல் வெற்றி குவியும். இந்த வாய்ப்பை விடமாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோலார் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முதலீடு செய்யலாம். 3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் இடமாற்றம், வீடு மாற்றம் நிச்சயம் இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருப்பதால் எதிரிகள் எல்லாம் உங்களிடம் சரண்டராவார்கள். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் கடந்து செல்லுங்கள். கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும். ஆளுமை அதிகரிக்கும். தெளிவாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். காதல் இனிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ராகுவின் அமைப்பு மட்டும் சரியாக இல்லை. உடல் நலத்தில் கவனம் தேவை.விருச்சிகம்
மாற்றங்கள் நிச்சயம்
உத்யோகத்தில் உயர்வு