Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. குருவின் இந்த பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்ன பலன்கள் எல்லாம் கிடைக்கப் போகிறது என விரிவாகப் பார்க்கலாம்.
மிதுன ராசியினருக்கு மரண பயம் நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்படும். வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக அற்புதமாக இருக்கும் காலகட்டம். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 2 ஆம் இத்தில் குரு உச்சம் பெறுவதால் குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. பக்கத்து வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்களிடம் வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் சட்டசிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். தொழில் அற்புதமாக இருக்கும். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை நீங்கும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது வெற்றியைத் தரும். தப்பான வார்த்தைகள், கெட்ட வார்த்தை பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வங்கிக் கடன், தனிப்பட்ட கடன் தீரும் யோகமான காலகட்டம். எதிரிகள், நண்பர்கள் உங்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். இதயம், சளி, சைனஸ், அலர்ஜி, காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குரு உச்சமாவதால் 24 வயதைக் கடந்தவர்கள் பிரஷர், பிபி, இதயத்தை பரிசோதனை செய்து கொள்வது ஏற்றத்தை தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகளை மருத்துவமனையில் ஓரிருநாள் இருந்து சிகிச்சை பெற்று பூரண குணமடைவீர்கள். திருவெண்காடு சென்று வழிபாடு செய்து வருவது ஏற்றத்தை தரும்.மிதுனம்
வாக்குவாதம் வேண்டாம்
தடை நீங்கும்
கடன் தீரும்
ஆரோக்கியம்