Guru Peyarchi: ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் குரு பகவான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிப்பது மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், பிற கிரகங்களின் அமைப்பு மற்றும் குருவின் விசேஷ பார்வைகள் காரணமாக பலன்களின் அளவு ராசிக்கு ராசி மாறுபடும்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2026 ஜூன் 2 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் 5, 7, 9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிகளில் பதிவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி மற்றும் வளர்ச்சி நிச்சயமாகக் கிடைக்கும் காலமாக இது அமைகிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் உயர்வும் கிடைக்கும். தற்போதைய உழைப்பு எதிர்கால முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் உறவுகள் மேலும் வலுப்படும். பெரியோரின் ஆலோசனைகளை மதித்து நடப்பது நன்மை தரும். வாரிசுகள் தொடர்பான விஷயங்களில் தேவையற்ற கண்டிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படலாம். சகோதர உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். புதிய நபர்களை நம்பி பெரிய முதலீடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியத்தில் ஒற்றைத் தலைவலி, நரம்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரவு நேரப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. துர்க்கை அம்மனை வழிபடுவது வாழ்வில் புத்துணர்ச்சியையும் நல்ல மாற்றங்களையும் அளிக்கும். ஏற்றமும் மாற்றமும் நிறைந்த காலகட்டமாக இது அமையும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் இனிமையான சூழல் உருவாகும். உங்கள் பேச்சில் இனிமை இருந்தால் உறவுகள் மேலும் வலுப்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும். சுப நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேரும் யோகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக வெளிநாட்டு தொடர்புடைய வர்த்தகங்களில் நேரடி கவனம் செலுத்துவது கூடுதல் நன்மையைத் தரும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். வயிறு, பல் மற்றும் சளி தொடர்பான உடல்நலக் குறைகளை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும். விநாயகர் வழிபாடு வாழ்க்கையில் ஒளிமயமான மாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலமாக இது அமைகிறது. ஆனால் அந்த நம்பிக்கை அகங்காரமாக மாறாமல் பார்த்துக்கொண்டால் தொடர்ந்து உயர்வுகளை அடைய முடியும். பணியிடத்தில் உங்கள் திறமையும் உழைப்பும் உரிய அங்கீகாரத்தைப் பெறும். மேலதிகாரிகள் வழங்கும் பொறுப்புகளை முழு கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். தேவையற்ற விவாதங்கள் மற்றும் வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத மாற்றங்கள் வந்தாலும் அவற்றை வரவேற்று செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் உறவு இனிமையாக அமையும். சிலருக்கு புதிய வாழ்க்கைத் தொடக்கம் அல்லது முக்கிய குடும்ப நிகழ்வுகள் நடைபெறலாம். குடும்ப மூத்தவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்த மாற்றங்கள், பரம்பரை நோய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பழனி முருகனை வழிபடுவது பலவிதமான நன்மைகளையும் மனநிம்மதியையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.துலாம் ராசி
விருச்சிக ராசி
தனுசு ராசி