சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு ஐடி விங் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுப்பது சரியல்ல என கட்சியின் ஐடி விங் செயலாளராக இருக்கும் ராஜசத்யன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியலில் அல்லாதவர்களை, கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து ,
கழகத்திற்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது.
அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது . தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்... இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்! அதிமுகவை மறுசீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகன் மிதுன் பழனிசாமியை கட்சிக்குள் கொண்டு வர ஆதரவாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்குப் போட்டியாக, மிதுனுக்கு அதிமுகவின் இளைஞரணிச் செயலாளர் அல்லது ஐடி விங் (IT Wing) செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்பை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிதுன் பழனிசாமியின் அரசியல் வருகை குறித்த செய்திகள் அதிமுகவிற்குள் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனது பகிரங்கமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "அதிமுக என்பது சாதாரணத் தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய கட்சி, இது ஒரு குடும்பக் கட்சி அல்ல. எடப்பாடி பழனிசாமி தனது மகனை உள்ளே கொண்டு வர நாடகமாடுகிறார். அடுத்தடுத்து சந்திக்கும் தேர்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல், கட்சியைத் தனது குடும்பப் பிடிக்குள் கொண்டு செல்ல அவர் முயற்சிக்கிறார்" என்று சி.வி.சண்முகம் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த உட்கட்சி எதிர்ப்புகளுக்கு இடையே, மிதுன் பழனிசாமிக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சி.வி.சண்முகம் கடும் கண்டனம்!