சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், இன்று தலைமைச் செயலகத்தில் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டம் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
புதிய அரசின் திட்டங்களை, திசையை நிர்ணயிக்கும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனை என்பதால், அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உன்னிப்பாகக் கவனித்தனர்.
கூட்டத்தில் அனைத்து புதிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் நலத்திட்டங்கள், மாநில வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான்கு மிக முக்கியமான அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்த உத்தரவுகள் தமிழக நிர்வாகத்தை தூய்மையான, திறமையான, மக்கள் நலன் சார்ந்த திசையில் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு, மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்திய முதலமைச்சர் விஜய், முதல் உத்தரவாக முழு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தூய்மையான நிர்வாகத்தை (Clean Government) உறுதி செய்ய உத்தரவிட்டார். அரசுத் துறைகளின் ஒவ்வொரு செயல்பாடும் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும், எந்தவித தாமதமோ, அலைக்கழிப்போ இல்லாமல் சாமானிய மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அமைச்சர்கள் தங்கள் துறைகளை முழு அர்ப்பணிப்புடன் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், "நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும். எனவே, எந்தவித சிறிய தவறுக்கும் (No Mistakes) இடமில்லை" என்று எச்சரித்தார். கோப்புகளை கவனமாகப் படித்து, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தின் மிக முக்கியமான பகுதியாக ஊழலுக்கு எதிரான எச்சரிக்கை அமைந்தது. அமைச்சரவையில் உள்ள எவரேனும் முறைகேடுகளில் சிக்கினால், பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். "ஆட்சிப் பொறுப்பு என்பது சுயலாபத்திற்கான வழி அல்ல. என் காதுக்கு ஏதாவது தகவல் வந்தது.. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் 'மெகா' அதிரடி நடவடிக்கை (Massive Action) எடுக்கத் தயங்க மாட்டேன்" என்று அழுத்தமாக எச்சரித்தார். இந்தப் பகுதி கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மட்டுமல்ல, துறைச் செயலர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் கடமையில் தவறக்கூடாது என்று உத்தரவிட்டார். அதிகாரத்துவ அலட்சியம் அல்லது முறைகேடுகளுக்கு துணைபோனால் உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். கூட்டத்தின் இறுதியில் முதலமைச்சர் விஜய், "மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம். அதை ஒருபோதும் சிதைத்துவிடக் கூடாது. இது என் கட்டளை" என்று உறுதியுடன் தெரிவித்தார். இந்த அதிரடி நகர்வுகளுக்கு மூத்த அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு மூத்த அமைச்சர், "தலைவர் மிகத் தீர்க்கமாக இருக்கிறார். தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்பதை முதல் கூட்டத்திலேயே உணர்த்திவிட்டார்" என்றார். அரசியல் விமர்சகர்கள், "பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது" என்று பாராட்டினர்முதலாவது உத்தரவு: முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் தூய்மையான நிர்வாகம்
இரண்டாவது உத்தரவு: தவறுகளுக்கு இடமில்லை
மூன்றாவது உத்தரவு: ஊழல் பேர்வழிகளுக்கு கடும் எச்சரிக்கை
நான்காவது உத்தரவு: அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை