2025 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. தட்டி தூக்கிய ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ!
ஸ்டாக்ஹோம்: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படும். அதன்படி இப்போது 2025 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை (László Krasznahorkai) என்பவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படும். ஆல்பிரட் நோபல் என்ற சுவீடன் தொழிலதிபர் நினைவாக 1901 முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் திங்கள்கிழமை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் 2025 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்கை (László Krasznahorkai) என்பவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கலைக்கு இருக்கும் சக்தியை நம்பிக்கையூட்டும் வகையில் தனது தனித்துவமான, தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications