மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான்


  • துபாய்: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகப் போர்க்களமாக மாற்றி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க ராணுவம் தனது கெஷ்ம் தீவு மீது நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நேற்று நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா ஈரான் இடையே நேரடித் தாக்குதல்கள் குறைந்துவிட்டாலும் முழுமையாக நின்றுவிட்டது எனச் சொல்ல முடியாது. அவ்வப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதும் அதற்கு ஈரான் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மத்தியக் கிழக்கில் பதற்றமான ஒரு சூழலே உருவாகி வருகிறது.

    Advertisement

    அதிகாலையில் தாக்குதல்

    இதற்கிடையே இன்று அதிகாலை குவைத் வான்பரப்பிற்குள் ஈரானின் ஏவுகணைகளும், ட்ரோன்களும் ஊடுருவியதைத் தொடர்ந்து, குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்து அவற்றை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தும் அதிரடிப் பணியில் இறங்கின. அதிகாலை நேரத்தில் குவைத் முழுவதும் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

    இது தொடர்பாக குவைத் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி விடுத்துள்ள அவசர எச்சரிக்கையில், "விண்ணில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் இடிபாடுகள் மற்றும் சிதறல்களைப் பொதுமக்கள் யாரும் தொடக் கூடாது; அது பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்றார்.

    Advertisement

    என்ன நடந்தது

    மறுபுறம், அமெரிக்காவின் 5வது கடற்படைக் கப்பல் பிரிவு தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைன் நாட்டிலும் அவசரக்கால எச்சரிக்கை சைரன்கள் அதிரடியாக ஒலிக்கவிடப்பட்டன. பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    பஹ்ரைன் மற்றும் குவைத் வான்பரப்பில் ஈரான் ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் காட்சிகளை ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளது. அது மேலும், "எங்களது தொலைத்தொடர்பு ஆண்டெனா மற்றும் எண்ணெய் விநியோகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளோம். அமெரிக்காவின் அத்துமீறல்களுக்குப் பதிலடியாக இங்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க 5வது கடற்படைத் தளம் மற்றும் வான்படைத் தளங்களைத் தாக்கி முடக்கியுள்ளோம்" என்றார்.

    Advertisement

    பின்னணி

    இந்த ஒட்டுமொத்த ராணுவ மோதலுக்கும் முக்கியப் புள்ளி ஜூன் 2ஆம் தேதி அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) நடத்திய அதிரடித் தாக்குதலாகும். மத்தியக் கிழக்கு பிராந்தியம் முழுவதும் அச்சுறுத்தலாக விளங்கும் ஈரான் ட்ரோன் ஆபரேஷன்களைக் கட்டுப்படுத்தும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரான் ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை அமெரிக்கப் படைகள் ஏவுகணைகள் மூலம் அடியோடு தகர்த்தெறிந்தன.

    ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் உடனடியாக ஒரு விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள தங்களது ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறும் தாக்குதல்கள் முற்றிலும் பொய் என்று அமெரிக்கா பாணியில் மறுத்துள்ளது. அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்த முயன்ற தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் அமெரிக்கப் படைகள் முழு பலத்துடனேயே மத்தியக் கிழக்கில் இயங்கி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    Advertisement

    கெஷ்ம் தீவு

    கெஷ்ம் தீவைத் தாக்கிய அமெரிக்காவைப் பழிவாங்க, வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் வான்பரப்பை ஈரான் தனது ஏவுகணைகளால் உலுக்கியிருப்பது நிலைமையை மேலும் மோசமானதாகவே மாற்றியுள்ளது.. அமெரிக்கா தனது தளங்கள் பாதிக்கப்படவில்லை என மறுத்தாலும், ஹார்முஸ் ஜலசந்திக்கு நள்ளிரவில் அரங்கேறியுள்ள இந்த வான்வழித் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமானதாகவே மாற்றியுள்ளது.

    English Summary

    In retaliation for the US strike on Qeshm Island, Iran launched a midnight missile and drone assault targeting US Central Command bases(மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய அதிரடி தாக்குதல்): Iran attack on US bases in Middle east latest news in tamil.