விஜய்யின் குணம் எடப்பாடியார் இடத்தில் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.. ஆர்பி உதயகுமார்


  • மதுரை: முதலமைச்சர் விஜயின் ஒப்பாரியை நாட்டு மக்கள் கேட்க தயாராக இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். விஜய்யிடம் இருக்கும் வசீகரம், சினிமா கவர்ச்சி, விஜய் பஞ்ச் டயலாக், விஜய் ஏமாற்று குணம் ஆகியவை எடப்பாடியார் இடத்தில் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசுகையில், "நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலிலே 35 சதவீதம் ஆதரவு வாக்குகளை பெற்று, 65 சதவீதம் எதிர்ப்பு வாக்குகளை பெற்று இருக்கின்ற முதல்வர் விஜயின் பாப்புலாரிட்டி இப்போது உலகத்திலேயே உச்சத்தில் இருக்கிறதாக தொடர்ந்து பக்காவான பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சோசியல் மீடியாவில் டிரெய்னடு ப்ரொபஷனல் இன்புலியன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த வாடைக்கு அமர்ந்திருப்பவர்கள்.

    Advertisement

    விஜயின் பிம்பத்தை பாப்புலர்லாக்கி கட்டமைக்கின்ற கடமையை கச்சிதமாக காட்சிப்படுத்த கணக்கு வழக்கு இல்லாமல், பல கோடி ரூபாயை கொட்டி கொடுப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு சில உதாரணங்களை நாம் இன்றைக்கு பார்க்கிறோம்.. நம்ம முதல்வர் விஜய் எவ்வளவு அழகாக கொடி அசைக்கிறார் பார்த்தீர்களா, எந்த மனசு சார் அவருக்கு எவ்வளவு, ஸ்டைலாக நடக்கிற பாத்திங்களா, போதை பொருள் ஒழிப்பதற்கு எவ்வளவு வேகமாக ஓடுகிறார் பாத்திங்களா, என்ன மனசு சார் முதல்வர் விஜய்க்கு, லஞ்சத்தை ஒழிக்க எவ்வளவு துணிச்சலாக whatsapp எண் அறிவித்திருக்கிறார் பார்த்தீர்களா என்ன தைரியம் நம்ம முதல்வருக்கு .

    Advertisement

    பயபக்தியோட தன்னடக்கமாக எப்படி சாமி கும்பிடறார் பார்த்தீங்களா, யாருக்கு சார் இந்த மனது வரும் வரும்? என்னமா சட்டசபையில் கலக்குகிறார். எப்படி செமையா செய்கை பாத்திங்களா இதெல்லாம் ஒரு தில்லு வருது சார். ரேசன் கடையில கீழே கொட்டால் சர்க்கரையை எப்படி கைக்குள்ள கொட்டுகிறார் பாத்திங்களா? சீராக எப்படி கார் ஓட்டுகிறார், அங்கே கர்நாடகாவில் இருந்த ஓட்டி வருகிறபோது பிளாஸ்டிக் பாட்டில்ல வச்சிருந்தை மட்டும் கேட்கக்கூடாது.

    சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவுக்கே கைதா.. மீம்ஸை பகிர்ந்து திமுக பதிலடி

    பயணிகளிடம் , பயனாளிகளிடம் செல்பி எடுக்கிற கலையை பார்த்தீர்களா.. டிஜிட்டல் பிளாட்பார்ம் விஜயை அடிக்க ஆளே இல்லை.. யாருக்கு சார் வரும் .என்ன தொழில்நுட்பம். பக்காவா பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறாரே.. இந்த கணிவும், துணிவும் யாருக்கு சார் உள்ளது விஜய்க்கு தான் உள்ளது.

    Advertisement

    இப்படி ஒவ்வொரு நொடிக்கு நொடி, விஜயின் பிம்பத்தை செயற்கையாக கட்டமைப்பதை பார்க்கின்ற போது, ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எந்த எந்த முதல்வரும் செய்யாத திட்டங்களை ,இப்போது இவர் மட்டும்தான் மக்களுக்கு செய்து வருவது போல ஒரு கனகச்சிதமான கட்டமைப்பு செய்து வருவதோடு, எதிர்க்கட்சிகள் யாராவது இதை பற்றி விஜிய்யிடம் கேள்வி கேட்டால் போச்சு, உடனே என்ன சொல்வார். வாய் இருக்கிறது என்பதால் என் மேல பழி போடுறாங்க என்று உணர்ச்சிவசமான, வசீகரமான வசனத்தை பேசி அசத்தி அரசியலை அதிர வைக்கிறார் முதல்வர் விஜய்.

    Advertisement
    அமெரிக்கா உடைத்த பர்னிச்சர்கள்.. புடுங்கியது பூராம் தேவையில்லாத ஆணி தான்.. கசப்பான உண்மை

    அவர் ஆடுகிற அரசியல் ஆட்டத்தில் முக்கியமான ஒன்று.. அதிமுகவை அபகரிக்க வேண்டும் என்ற பேராசையில் முதல்வர் விஜய் ஒவ்வொரு முறையும் தடுமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை , அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. தமிழ் நாட்டு மக்களும் இதை உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள் .. அண்ணா திமுக தொண்டர்களும் இதை வேதனையோடு பார்த்து வந்தார்கள்.

    த.வெ.க அரசின் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு ஆதரவு அளிக்க 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து அதிமுகவை அலேக்காக தூக்கிவிடலாம் அதன் பிறகு விஜய்க்கு ஆதரவாக சட்டமன்றத்திலே அவர்களை வாக்களித்தால், ஆதரவளித்த உறுப்பினர்களை அமைச்சர் அதிகாரம் அளித்து என்கிற ஆசை காட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சாமானியர் என்று விஜய் தப்பு கணக்கு போட்டு விட்டார். எடப்பாடியாரை குறைத்து மதிப்பீடு செய்து விட்டார் .

    Advertisement

    ஆகவே தான் அவருடைய ரகசிய திட்டம் எடப்பாடியாரை விலக்கி வைத்துவிட்டு. அதிமுகவை விஜய்க்கு அடகு வைக்கவும், அடிமை சாசனம் எழுதி வைப்பதற்கு தயாராக இருப்பவர்களை வைத்து அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடியாரையும், அதிமுகவை ஒட்டுமொத்தமாக அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்ற விஜய்யின் ரகசிய திட்டத்தை, எடப்பாடியார் செய்த புண்ணியம், எதற்கும் அஞ்சாத மன உறுதி எப்போதும் மாறாத விசுவாச தொண்டர்களின் ஆதரவால் அதிமுகவின் ஒரே நம்பிக்கையை எடப்பாடியார் என்று ஒட்டுமொத்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சூளுரைஏற்று விஜய் என்று ரகசிய திட்டத்தை சுக்கு நூறாக அகற்றி எரிந்து விட்டார்கள்.

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து.. 8 ரயில்களின் விவரம்

    இன்னைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆன்மாக்களின் ஆசி எடப்பாடியாருக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் பேராசை பிடித்தவர்களிடமிருந்து, அதிமுகவை மீண்டும் மீட்டெடுத்து புதிய பொலிவோடும் வலிமையோடும் தலைமை தாங்கி வழி நடத்தி, மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பை காட்டுவேன் என்று தன்னை அர்ப்பணித்து அயராது உழைத்து வரும் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான கழக தொண்டர்கள் விசுவாச உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது.

    விஜயின் பாப்புலாரிட்டி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இன்றைக்கு இந்தியா முழுவதும் உச்சத்தில் இருப்பதாக இன்றைக்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விஜய் வாங்கியதோ 35, எதிர்ப்போ 65 , பெரும்பான்மைக்கு விஜய்க்கு தேவையான 118 ஆனால் தமிழ்நாட்டு மக்கள் வழங்கியதோ 108, விஜய்யிடம் இருக்கும் வசீகரம் , சினிமா கவர்ச்சி, விஜய் பஞ்ச் டயலாக், விஜய் ஏமாற்று குணம் ஆகியவை எடப்பாடியார் இடத்தில் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்

    ஆனால் நியாயம், விசுவாசம், மக்கள் சேவை, மக்களுக்கு அர்ப்பணித்து மக்களுக்கு உழைக்கின்ற ஒரு தலைவர் எடப்பாடியாருக்கு மக்கள் இப்போது வழங்கி இருக்கிற தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கள்கிறோம். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலரும் பொறுமையாக காத்திருப்போம் " இவ்வாறு ஆர்பி உதயகுமார் கூறினார்.

    English Summary

    R.B. Udhayakumar has stated that they acknowledge Edappadiyar does not possess the nature of Chief Minister Vijay.