முருகன் வழிபாடு: வீரம், துணிச்சல், தலைமைத் திறன் மற்றும் சொத்து யோகம் ஆகியவற்றை வழங்கும் கிரகமாக செவ்வாய் பகவான் போற்றப்படுகிறார். பூமியின் புதல்வனாக கருதப்படும் அங்காரகனின் அருள் கிடைத்தால் நிலம், வீடு போன்ற சொத்துகள் சேரும் என்பது ஜோதிட நம்பிக்கை. செவ்வாய் தோஷ நிவாரணத்திற்கும், குழந்தை வரம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் முருகன் வழிபாடு சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் செவ்வாயின் அருளும், முருகன் வழிபாட்டின் மகிமையும் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான், அங்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். நெருப்பு தத்துவத்திற்கு அதிபதியான இவர், வீரமும் துணிவும் நிறைந்த வாழ்க்கையை வழங்கக்கூடியவர். அதிகாரம் செலுத்தும் திறன், தலைமைப் பொறுப்பு ஏற்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, நேர்மை, நாணயம் மற்றும் எந்த சூழலிலும் வளைந்து கொடுக்காத மனப்பக்குவம் போன்ற சிறப்புகளை அளிப்பவர் செவ்வாய் பகவான். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால், அவருக்கு உயர்ந்த பதவி, சமூகத்தில் மதிப்பு மற்றும் சிறந்த ஆளுமை கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், கம்பீரமான தோற்றம், மிடுக்கான நடை, அதிகாரம் மிக்க குரல் ஆகியவற்றிற்கும் செவ்வாய் காரணமாக விளங்குகிறார். செவ்வாய் பகவான் பூமியின் புதல்வன் எனப் போற்றப்படுகிறார். அதனால் நிலம், வீடு, விவசாய நிலங்கள் போன்ற அசையா சொத்துக்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் அருள் கிடைத்தால் தான் நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் சொத்து சேர்த்தல் போன்ற யோகங்கள் எளிதில் அமையும் என நம்பப்படுகிறது. செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகப் பெருமான் கருதப்படுகிறார். எனவே, முருகன் குடிகொண்டுள்ள அனைத்து தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், சொத்து வாங்க விரும்புபவர்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் நாடுபவர்கள் தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் முருகன் துதிப் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்யலாம். மேலும், செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறைந்து, மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.செவ்வாய் கிரகத்தின் சிறப்புகள்
சொத்து யோகத்தை வழங்கும் செவ்வாய்
முருகன் வழிபாடும் செவ்வாய் பரிகாரமும்