சென்னை: "என் பிள்ளைகளுக்கு நான் அப்பாவாக மட்டும் இல்ல... அம்மாவாகவும் இருக்கணும்..." என்று சீரியல் நடிகர் பரத் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
திரையுலகில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், வாழ்க்கை அவருக்கு கொடுத்த சோதனை எந்த சினிமா கதையையும் விட கொடுமையானதாக இருந்தது. மனைவியை இழந்த துயரம், குழந்தைகளின் எதிர்காலம், தனிமை, மன அழுத்தம் என பல போராட்டங்களை கடந்து இன்று நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் பரத் கல்யாண்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான கல்யாண்குமாரின் மகன் தான் பரத் கல்யாண். தந்தையை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறைக்குள் வந்த அவர், ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் தமிழிலும் சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த பரத் கல்யாண், "அபூர்வ ராகங்கள்", "வம்சம்", "பாரதி கண்ணம்மா", "இலக்கியா" உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், 2022ஆம் ஆண்டு பரத் கல்யாணின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது. அவரது மனைவி பிரியதர்ஷினி திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக மேற்கொண்டிருந்த டயட் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. முதலில் வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் கோமா நிலைக்கு சென்றார். சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து மனம் திறந்த பரத் கல்யாண், "என் மனைவி 40 நாட்கள் வென்டிலேட்டரிலும், 7 மாதங்கள் கோமாவிலும் இருந்தார். தினமும் ஒரு அதிசயம் நடக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் கடவுள் வேறு முடிவு எடுத்திருந்தார்" என்று உருக்கமாக பேசியுள்ளார். அவரது வார்த்தைகளில் இன்னும் அந்த வலி தெரிகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மனைவி மறைந்த பிறகு பரத் கல்யாணுக்கு பலரும் ஒரே ஆலோசனையை கொடுத்தார்களாம். "நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க. வாழ்க்கை முன்னாடி போகணும்" என்று நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர் கொடுத்த பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "என் பையனுக்கு இப்போது 23 வயசு. மகளுக்கு 18 வயசு. அவங்க வாழ்க்கையை புரிஞ்சுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாங்க. என்னையும் பார்த்துக்க தெரியும். அதனால எனக்கு இன்னொரு கல்யாணம் தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்" என்று கூறியுள்ளார். பரத் கல்யாணின் பேட்டியில் பலரையும் நெகிழ வைத்த வரிகள் இதுதான். "கடந்த நான்கு வருடங்களாக என் குழந்தைகளுக்கு நான் அப்பாவாக மட்டும் இல்ல... அம்மாவாகவும் இருக்கிறேன்." "அவர்களை நல்லபடியா கரை சேர்க்கணும். அதுதான் இப்போ என் வாழ்க்கையின் மிகப்பெரிய நோக்கம்." என்று அவர் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகளை கேட்டு பலர் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். மனைவி மறைவுக்கு பிறகு தனிமையில் மூழ்காமல், வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்ததாகவும் பரத் கல்யாண் கூறியுள்ளார். "சிங்கிள் பேரன்ட்ஸ் குழுக்களில் இணைந்தேன். அங்கே பலரது வாழ்க்கை அனுபவங்களை கேட்டேன். அவர்களுடன் பேசினேன். அதனால் வாழ்க்கையை பார்க்கும் பார்வையே மாறிவிட்டது." என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னைப் போல பலர் போராடி வெற்றி பெற்ற கதைகள் தான் தன்னையும் முன்னோக்கி நகர்த்தியதாக கூறியுள்ளார். சமீப காலமாக தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பரத் கல்யாண் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். வெளியே சுற்றுலா செல்வது, குடும்பமாக நேரம் செலவிடுவது, சிறிய மகிழ்ச்சிகளை கொண்டாடுவது போன்ற தருணங்களை அவர் பகிரும் போது ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பரத் கல்யாண் கூறிய இன்னொரு வரியும் பலரின் மனதை தொட்டுள்ளது. "வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் சவால்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆனால் கடந்த கால சோகத்தை நினைத்து வாழ முடியாது. எதிர்கால நம்பிக்கையோடுதான் நான் வாழ்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். திரையில் பல கதாபாத்திரங்களில் நடித்த பரத் கல்யாண், நிஜ வாழ்க்கையில் ஒரு போராளியாக மாறியிருக்கிறார். மனைவியை இழந்த வேதனையை மனதுக்குள் சுமந்தபடியே, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ள அவரது பயணம் தற்போது பலருக்கும் ஒரு உத்வேகமாக மாறியுள்ளது. அதனால்தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒரே குரலில் கூறி வருகின்றனர், "உண்மையான ஹீரோ சினிமாவில் மட்டும் இல்லை... வாழ்க்கையிலும் இருக்கிறார். அந்த ஹீரோ தான் பரத் கல்யாண்!"பிரபல நடிகரின் மகன்
ஒரு குடும்பத்தை புரட்டிப் போட்ட துயரம்
7 மாதங்கள் கோமா
இன்னொரு கல்யாணம்
அப்பாவும்... அம்மாவும்
சிங்கிள் பேரன்ட் வாழ்க்கை
குழந்தைகளோடு புதிய வாழ்க்கை
பிக் பாஸ் போல் வரும்
எதிர்கால நம்பிக்கை பெரியது
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா?
ரசிகர்களை நெகிழ வைத்த மனிதர்