சென்னை: நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான சில நாட்களிலேயே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யா மட்டுமல்லாமல், பல கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. குறிப்பாக கேரளாவில் இருந்து தனது மகளின் சிகிச்சைக்காக சென்னை வரும் தந்தையாக நடித்திருந்த மலையாள நடிகர் இந்திரன்ஸின் நடிப்பு பலரையும் கண்கலங்க வைத்தது.
படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் இந்திரன்ஸ். குறிப்பாக மருத்துவமனையில் தனது மகளின் சிகிச்சைக்காக போராடும் காட்சிகளும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கூட தெரியாமல் தவிக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டன. சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து மனம் திறந்த இந்திரன்ஸ், கருப்பு படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ஆர்.ஜே. பாலாஜி கதை சொல்ல வந்தபோது முதலில் என்னுடைய கதாபாத்திரம் தான் என்னை ஈர்த்தது. கேரளாவில் இருந்து பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சிகிச்சைக்காக சென்னை வருவது நிஜ வாழ்க்கையில் நடக்கும் விஷயம். அந்த மாதிரியான ஒரு தந்தையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது" என்று தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்ததால், கருப்பு படத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். "மலையாள சினிமாவில் ஏற்கனவே சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் கருப்பு படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை விட்டுக்கொடுக்க மனசு வரவில்லை. அதனால் மற்ற படங்களின் தேதிகளை மாற்றி வைத்து, கருப்பில் நடித்தேன்" என்று அவர் கூறியுள்ளார். இன்று தேசிய விருது பெற்ற நடிகராக அறியப்படும் இந்திரன்ஸ், தனது வாழ்க்கையை சினிமாவில் நடிகராக தொடங்கவில்லை என்பது பலருக்கும் தெரியாத விஷயம். மலையாள சினிமாவில் ஆரம்பத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அவர், பின்னர் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நகைச்சுவை நடிகராக அறிமுகமான அவர், காலப்போக்கில் குணச்சித்திர நடிகராக மாறி தனது திறமையை நிரூபித்தார். குறிப்பாக மலையாளத்தில் வெளியான 'ஹோம்', 'அஞ்சாம் பாதிரா', '2018' உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 'ஆளோருக்கம்' திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். கருப்பு படம் வெற்றி பெற காரணம் சூர்யாவின் மாஸ் நடிப்பு மட்டும் அல்ல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சாதாரண மக்களின் வாழ்க்கை, மருத்துவ சிக்கல்கள், குடும்ப பாசம், சமூக பிரச்சனைகள் போன்ற விஷயங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த வகையில் இந்திரன்ஸ் நடித்த தந்தை கதாபாத்திரம், படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட காட்சிகளில் ஒன்று, தனது மகளின் சிகிச்சைக்காக அலைந்து திரியும் இந்திரன்ஸின் காட்சிகள் தான். "ஒரு தந்தையின் வலியை இவ்வளவு இயல்பாக யாராலும் நடிக்க முடியாது", "கருப்பில் சூர்யாவுக்கு அடுத்தபடியாக மனதில் நின்றது இந்திரன்ஸ் தான்" என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பொதுவாக ஹீரோக்களின் மாஸ் காட்சிகள் தான் பேசப்படும் நிலையில், கருப்பு படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்த ஒரு குணச்சித்திர நடிகரின் நடிப்பு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. 300 கோடி வசூலை தாண்டி வெற்றிநடை போட்டு வரும் கருப்பு திரைப்படத்தில், சூர்யாவின் நடிப்புக்கு இணையாக இந்திரன்ஸின் உணர்வுபூர்வமான நடிப்பும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.நடிகர் இந்திரன்ஸ் பேட்டி
கருப்பில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?
கால்ஷீட் பிரச்சனை
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா?
யார் இந்த இந்திரன்ஸ்?
ஆர்ஜே பாலாஜி பேசியதை ஏத்துக்க முடியல! அவமானப்படுத்திட்டாரு! கமலுக்கு அடுத்து சூர்யா தான்.. போஸ் வெங்கட் ஆதங்கம்
கருப்பின் மிகப்பெரிய பலம்
ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சி