சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாகவும் தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கிக் கொண்ட நடிகர் கிருஷ்ணா, இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். 48 வயதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. "என் குடும்பம் இன்னும் கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது" என்ற உணர்ச்சிகரமான அறிவிப்புடன் வந்த இந்த மகிழ்ச்சி செய்தி, தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துகளாக வெடித்து வருகிறது.
கிருஷ்ணாவின் மகிழ்ச்சி பதிவு
நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில், "என் குடும்பம் பெரிதாகி இருக்கிறது... என்னுடைய இரண்டு பெண்களும் நலமாக இருக்கிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு வரியாக வந்த இந்த பதிவு கூட, ரசிகர்களிடம் பெரிய உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதில் மீண்டும் தந்தையாகி, அதுவும் பெண் குழந்தையை வரவேற்றிருப்பது, கிருஷ்ணாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. பலரும், "இந்த வயதில் வந்த இந்த மகிழ்ச்சி அவருக்கு இன்னும் பெரிய அமைதியை கொடுக்கட்டும்", "குட்டி தேவதைக்கு அன்பான வாழ்த்துகள்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணா என்ற பெயர் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' திரைப்படத்தின் மூலம் சிறுவயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர். அப்போது குழந்தை முகத்தோடு திரையில் தோன்றிய அவர், பின்னர் 'இருவர்' உள்ளிட்ட சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஆனால், சிறுவயதில் திரையில் தோன்றிய பலர்போல் அவர் அப்படியே நடிப்பில் தொடர்ந்து வரவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி, 2008ஆம் ஆண்டு 'அலிபாபா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு 'கழுகு' திரைப்படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் காட்டிய இயல்பான நடிப்பும், கிராமத்து பையன் இமேஜும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் வன்மம், யாமிருக்க பயமேன், யட்சன், யாக்கை, பண்டிகை, நிபுணன், விழித்திரு, மாரி 2, கழுகு 2 என பல படங்களில் நடித்தார். வணிகரீதியாக மிகப்பெரிய உச்சத்தை எட்டவில்லை என்றாலும், "கிருஷ்ணா என்ற நடிகருக்கு ஒரு தனி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கிறது" என்ற கருத்து சினிமா ரசிகர்களிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது. கிருஷ்ணாவின் பின்னணி பற்றி பேசும்போது, அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி. மேலும், இவர்களின் தந்தை பட்டியல் சேகர் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர். அதனால் சினிமா சூழல், கேமரா, ஷூட்டிங், கதை, ஹீரோ, டைரக்டர் என்ற உலகம் கிருஷ்ணாவுக்கு சிறுவயதிலிருந்தே புதியதல்ல. ஆனால் அந்த பின்னணி இருந்ததாலேயே அவருக்கு எல்லாம் எளிதாகிவிட்டது என்று சொல்ல முடியாது. குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, பிறகு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் பல ஆண்டுகள் அவர் போராடியிருக்கிறார். சில படங்கள் பேசப்பட்டன, சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் அவர் சினிமாவை விடாமல் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணா வெறும் நடிகராக மட்டுமல்லாமல், சினிமாவின் பல துறைகளிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். திரை உலகின் பின்னணி வேலைகள், டிஜிட்டல் உள்ளடக்கங்கள், வெப் ஸீரிஸ் முயற்சிகள் போன்ற விஷயங்களிலும் அவருக்கு ஈடுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் ஹீரோவாக மட்டும் நிலைநிற்க வேண்டும் என்ற ஒரே பாதையில் போகவில்லை; பல கோணங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றவர் என்ற பார்வையும் அவரைப் பற்றி இருக்கிறது. கிருஷ்ணாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் பலமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளது. முதல் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நடந்தன. பின்னர் தனது தோழி சாத்வியாவை திருமணம் செய்து கொண்டார். அந்த இரண்டாம் திருமணமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. ஒரு கட்டத்தில் சர்ச்சைகள், ஏற்றத் தாழ்வுகள், தனிப்பட்ட பிரச்சனைகள் என பல விஷயங்கள் அவரைச் சுற்றி வந்தாலும், தற்போது குடும்ப வாழ்க்கையில் வந்திருக்கும் இந்த புதிய மகிழ்ச்சி, அவருக்கே ஒரு புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு பெண் குழந்தையை வரவேற்றிருப்பது, கிருஷ்ணா வாழ்க்கையில் இன்னொரு அழகான திருப்பமாக மாறியுள்ளது. "வாழ்க்கை எத்தனை தடவை மாறினாலும், ஒரு நல்ல செய்தி வந்தால் எல்லாமே புதிதாக தொடங்கிவிடும்" என்ற உணர்வை ரசிகர்களிடையே இந்த பதிவு உருவாக்கியுள்ளது.குழந்தை நட்சத்திரம்
சினிமா குடும்பத்தில் பிறந்தவர்
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்
நடிப்பை தாண்டி தயாரிப்பு, டிஜிட்டல் உலகம்
“என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...” மனைவி ஸ்வாதிகா செயலால் நடிகர் பிரேம் எமோஷனல் பதிவு
இரண்டாம் திருமணம்