பகிரங்க மன்னிப்பு கேட்ட ரவி மோகன்! சர்ச்சைகளால் சோர்ந்த நடிகரின் உணர்ச்சிபூர்வ அறிவிப்பு


  • சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டு வரும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் ரவி மோகன் மாறியுள்ளார். திரைப்படங்களை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கை, விவாகரத்து சர்ச்சை, கெனிஷாவுடனான நட்பு, குழந்தைகள் தொடர்பான உருக்கமான பேச்சுகள் என தொடர்ச்சியாக அவர் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்து வந்தன.

    Advertisement

    இந்த சூழ்நிலையில்தான் தற்போது ரவி மோகன் வெளியிட்டுள்ள ஒரு பகிரங்க மன்னிப்பு அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    மன்னிப்பு அறிவிப்பு

    சமீபத்தில் வெளியான செய்தித்தாள் அறிவிப்பில், ரவி மோகன் தனது பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் தனது குடும்ப வாழ்க்கை தொடர்பாக பொதுவெளியில் பேசிய கருத்துகள் சிலருக்கு மனவேதனை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில், யாருக்கெல்லாம் சம்பந்தப்பட்டதோ அவர்களுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 23- 5- 2025 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, நிலுவையில் உள்ள திருமண தகராறு தொடர்பான இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

    எனினும் 16- 5 2026 அன்று நான் வழங்கிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் எனது திருமண தகராறு தொடர்பான சில கருத்துக்களை வெளியிட்டேன். அவை மேற்கொண்ட நீதிமன்ற உத்தரவுக்கு முரணானவையாக இருந்தன. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்.

    Advertisement

    மேலும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் வெளியிட்ட கருத்துக்களால் மனவேதனை அடைந்திருக்கக் கூடிய அல்லது ஏதேனும் விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அனைவரிடமும் எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    என்ன நடந்தது?

    ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு கடந்த சில மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனால் கடந்த மே மாதம் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது குடும்ப வாழ்க்கை குறித்து பல உணர்ச்சிகரமான கருத்துகளை பகிர்ந்திருந்தார்.

    Advertisement

    அப்போது அவர் தனது குழந்தைகளை பார்க்க முடியவில்லை என்றும், பல ஆண்டுகளாக குடும்பத்திற்காக மட்டுமே உழைத்ததாகவும், சிலர் தன்னை குறிவைத்து தாக்கி வருவதாகவும் பேசியிருந்தார். அவரது அந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் குவிந்தன.

    23 வருட உழைப்பு

    அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரவி மோகன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். "23 வருடங்களாக இரவு பகலாக உழைத்திருக்கிறேன். என் குடும்பத்திற்காகவே வாழ்ந்தேன். என் குழந்தைகளை பார்க்க முடியாத நிலை என்னை வேதனைப்படுத்துகிறது" என்று அவர் கூறியிருந்தார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதோடு, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    Advertisement

    நீதிமன்றத்தில் எதிரொலித்த பேச்சு

    ரவி மோகனின் அந்த பேச்சுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை மீறி அவர் பொதுவெளியில் கருத்து தெரிவித்ததாக ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த பகிரங்க மன்னிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ரவி மோகன் தோழி கெனிஷாவிற்கு பெரிய சிக்கல்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி.. ரசிகர்கள் கேள்வி இதுதான்!

    கெனிஷா விவகாரமும் பரபரப்பு

    இதற்கிடையில், பின்னணி பாடகி கெனிஷாவின் பெயரும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டது. ரவி மோகனின் வாழ்க்கையில் கெனிஷா முக்கிய நபராக மாறியதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவின.

    Advertisement

    அதற்கு பிறகு கெனிஷா வெளியிட்ட வீடியோவில், "இனி ரவி மோகன் உங்கள் வசம்" என்று கூறி விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஆக்டிவாக இல்லாததும் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.

    ரசிகர்களை நெகிழ வைத்த அறிவிப்பு

    பொதுவாக சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் பிரபலங்களை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இத்தனை விவாதங்களுக்கு நடுவில், "என்னால் யாரேனும் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்" என்று வெளிப்படையாக கூறியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர், "இது ஒரு பொறுப்பான முடிவு" என்று பாராட்டி வருகிறார்கள்.

    மற்றொரு தரப்பு, "இத்தனை சர்ச்சைகளுக்குப் பிறகு வந்த மன்னிப்பு இது" என்றும் கருத்து தெரிவித்து வருகிறது.

    Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி

    மீண்டும் திரைக்கு திரும்புவாரா?

    கடந்த சில மாதங்களாக திரைப்படங்களை விட தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே செய்திகளில் இடம்பிடித்து வந்த ரவி மோகன், தற்போது அமைதியான பாதையை தேர்வு செய்திருப்பது போல தெரிகிறது. சமீபத்திய மன்னிப்பு அறிவிப்பு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்குமா? அல்லது நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.

    எதுவாக இருந்தாலும், "மனவேதனை அடைந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்ற ஒரு வரி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதுகுறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

    English Summary

    Actor Ravi Mohan has issued a public apology following controversy surrounding comments he made about his ongoing marital dispute. In a newspaper statement, the actor expressed regret for remarks made during a press interaction on May 16, 2026, acknowledging that they violated an earlier directive issued by the Madras High Court.According to the statement, the court had instructed both parties involved in the pending matrimonial case not to make public comments against each other. Ravi Mohan admitted that some of his remarks during the press conference were contrary to that order and offered an unconditional apology to the court.The actor also apologized to anyone who may have been emotionally hurt or affected by his comments. His statement comes amid a highly publicized divorce dispute involving his wife, Aarti Ravi, which has been widely discussed on social media and entertainment platforms over the past several months.During the earlier press conference, Ravi Mohan had spoken emotionally about his family life, claiming that he had dedicated more than two decades to his family and expressing sadness about being unable to see his children. Those remarks generated strong reactions from both supporters and critics.The controversy was further amplified by discussions surrounding singer Kenishaa, whose name repeatedly surfaced in online conversations related to the actor's personal life.Following legal objections regarding the press conference remarks, Ravi Mohan reportedly conveyed his willingness to apologize before the court, leading to the publication of the current statement.