சென்னை: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் சின்னத்திரை நடிகை தீபாவின் அப்பா புலவர் கணேசன் மீது நடைபெற்ற கொடூர அரிவாள் வெட்டு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புலவர் கணேசனை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையான தீபாவின் அப்பா புலவர் கணேசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தையாபுரம் பகுதியில் மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் அப்பகுதி மக்களை மட்டுமல்ல, சின்னத்திரை உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தந்தையின் உடல்நிலை குறித்து அறிந்ததும் தீபா மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் கதறி அழுததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மருத்துவமனைக்கு நேரில் சென்று புலவர் கணேசனை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும், குடும்பத்தினரிடமும் விரிவாக விசாரித்தார். மேலும் இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது பற்றியும் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. கீதா ஜீவன் சந்தித்த போது புலவர் கணேசன் தன்னிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாக விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அவர், "நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். அதோடு ஒரு கோவிலின் நிர்வாக பொறுப்பையும் கவனித்து வந்தேன். அந்த கோவில் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகளின் பின்னணியில்தான் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது வழக்கின் விசாரணையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. புலவர் கணேசன் வெறும் நடிகை தீபாவின் தந்தை மட்டுமல்ல. அப்பகுதியில் பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வி மட்டுமின்றி ஆன்மிக மற்றும் சமூக பணிகளிலும் ஆர்வமாக செயல்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் நிர்வாக பொறுப்பை கவனித்து வந்த நிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான் இந்த சம்பவத்துக்கு காரணமா என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். புலவர் கணேசனை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு கீதா ஜீவன் அங்கிருந்து கிளம்ப தயாரானார். அப்போது காயங்களுடன் படுக்கையில் இருந்த புலவர் கணேசன், தன்னை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியதற்காக கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்திருக்கிற. அந்த தருணம் அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் நடந்த இந்த சந்திப்பின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் கீதா ஜீவன் புலவர் கணேசனின் கையை பிடித்து ஆறுதல் கூறுவதும், அவர் நடந்த சம்பவத்தை விளக்குவதும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் தாக்குதல் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை தீபாவின் தந்தை கூறியுள்ள புதிய தகவல்கள் இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி உண்மைகளை வெளிக்கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.அதிர்ச்சியில் நடிகை தீபா
மருத்துவமனைக்கு நேரில் சென்ற கீதா ஜீவன்
தீபா அப்பா உருக்கம்
பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டவர்
அந்த 2 நாள் பட்டபாடு.. வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன்னு சொன்ன காரணம்! ஓபனாக பேசிய நடிகை சோனா
வைரலாகும் வீடியோ
கைது எண்ணிக்கை 3 ஆக உயர்வு