சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாகவும், பின்னர் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை சோனா. சர்ச்சைகளுக்கு அஞ்சாமல் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பேசக்கூடிய நடிகைகளில் ஒருவராக பிரபலமான அவர், சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்து பேசிய கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளன.
சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன்" என்று சோனா வெளிப்படையாக கூறியிருந்தார். அதோடு, குசேலன் படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்க 10-க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகள் வந்தபோதும் அவற்றை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு இணையத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் சோனா.
சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய சோனா, "நான் வடிவேலு பற்றி இரண்டு இடங்களில் மட்டுமே பேசியிருக்கிறேன். ஆனால் நான் 200 இடங்களில் பேசியது போல தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதை நானும் பார்த்தேன்" என்று கூறியுள்ளார். தான் கூறிய விஷயம் அளவுக்கு அதிகமாக பெரிதாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோனா பேசும் போது, ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் நடித்த பிறகு தான் வடிவேலுவுடன் இனி நடிக்கக்கூடாது என்று முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். "அந்த நேரத்தில் என்னுடைய குடும்ப சூழ்நிலை வேறு மாதிரி இருந்தது. நான் கிளாமர் ரோல்களில் நடித்து கொண்டிருந்தேன். வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது" என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் ஒரு முக்கியமான நபரின் ரெக்கமண்டேஷன் காரணமாக மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நடித்ததாகவும் சோனா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு மிக முக்கியமான நபரிடம் இருந்து ரெக்கமண்டேஷன் வந்ததால் தான் மருதமலை, பத்துக்கு பத்து போன்ற படங்களில் நடித்தேன். ஆனால் அந்த இரண்டு நாட்களை என்னால் மறக்க முடியாது. நான் மிகவும் கஷ்டப்பட்டேன்" என்று மனம் திறந்துள்ளார். அதேநேரத்தில் அந்த அனுபவம் குறித்து அவர் விரிவாக எந்த விவரங்களையும் பகிரவில்லை. தனது வாழ்க்கையின் அந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த சோனா, "சில இடங்களில் நம்மால் இருக்க முடியாது. ஆனால் சூழ்நிலை காரணமாக அங்கே இருந்தே ஆக வேண்டிய நிலை வரும். அதுபோலத்தான் அந்த நேரத்தில் எனக்கும் அமைந்தது" என்று கூறியுள்ளார்.இந்த ஒரு வரியே தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த சோனா, தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அதோடு தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கிறார். சினிமா மட்டுமின்றி சமூக பிரச்சனைகள், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரது பேட்டிகள் அடிக்கடி கவனம் பெறுவது வழக்கமாக உள்ளது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு குறித்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. திரையுலகில் அவருடன் பணியாற்றிய சிலர் தங்களது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளனர். அதேநேரத்தில் வடிவேலுவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சோனா கூறிய கருத்துகள் மீண்டும் அந்த விவாதத்தை சமூக வலைதளங்களில் உயிர்ப்பித்துள்ளன. சோனா தனது பேட்டியில் எந்தவிதமான புதிய குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. ஆனால் "அந்த இரண்டு நாட்களை மறக்க முடியாது" என்றும், "சூழ்நிலை காரணமாக தான் நடித்தேன்" என்றும் கூறியிருப்பது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அனுபவம் குறித்து அவர் கூறிய சில வரிகளே தற்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன.சோனா பேட்டி
குசேலன் படத்திற்கு பிறகு எடுத்த முடிவு
அந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாது
“அவரை நான் பார்க்கவே மாட்டேன்..” – திருமணம் பற்றி 54-வது பிறந்தநாளில் மனம் திறந்த நடிகை தபு
யார் இந்த சோனா?
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா
வடிவேலு குறித்து தொடர்ந்து எழும் சர்ச்சைகள்
மீண்டும் பேசப்படும் பழைய பேட்டி