சென்னை: தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பிரபலமாக இருப்பவர் நடிகை சோனா. தனது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் பயோபிக் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், சமீபத்திய பேட்டிகளில் தனது வாழ்க்கையில் நடந்த பல சர்ச்சைகள், கிசுகிசுக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.
அந்த வகையில் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பேசப்பட்டு வந்த ஒரு முக்கிய சர்ச்சைக்கு தற்போது அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுடன் அவருக்கு காதல் இருந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த உறவு முறிந்துவிட்டதாகவும் பல ஆண்டுகளாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் அதுகுறித்து முதல் முறையாக விரிவாக பேசியுள்ள சோனா, அந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற கற்பனைகள் தான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சோனா, "பிரேம்ஜியை வைத்து வந்த காதல் செய்திகள் எல்லாம் எனக்கு ரொம்பவே சிரிப்பாக இருக்கும். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லலாம், தம்பி என்று சொல்லலாம், பெஸ்ட் ஃபிரெண்ட் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது, பிரேம்ஜியின் குணத்தை பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். "ஒரு கேங்குல எல்லாரும் குடித்து மட்டையாக இருந்தாலும், ஒருத்தன் மட்டும் தெளிவாக இருந்து அனைவரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பான். அந்த மாதிரி பொறுப்பான மனிதர் தான் பிரேம்ஜி" என்று கூறி அவரை பாராட்டியுள்ளார். பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததற்கும், பின்னர் திருமணம் செய்ததற்கும் தன்னை காரணமாக சிலர் பேசிவந்ததை சோனா மறுத்துள்ளார். "பிரேம்ஜி 40 வயது வரை எனக்காகத்தான் கல்யாணம் பண்ணவில்லை. என்னுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் அவர் கல்யாணம் செய்து கொண்டார் என்று சிலர் கதை கட்டினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அது முழுக்க முழுக்க வதந்தி" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். தற்போது பிரேம்ஜி தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கும் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோனாவை பொறுத்தவரை, சர்ச்சைகள் என்பது புதிதல்ல. சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்தே தனது கருத்துக்களை நேரடியாகவும் வெளிப்படையாகவும் கூறி வந்தவர். இதனால் பலமுறை சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தனது நிலைப்பாட்டை மறைக்காமல் பேசியவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. கடந்த காலங்களில் சினிமா வாய்ப்புகள், தனிப்பட்ட உறவுகள், தொழில் வாழ்க்கை, உடல் நலம், பொருளாதார பிரச்சனைகள் என பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் பயோபிக் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சாதாரண நடிகையின் வாழ்க்கை அல்லாமல், பல ஏற்றத் தாழ்வுகள், வெற்றிகள், தோல்விகள், சர்ச்சைகள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை என்பதால் இந்த படம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் உச்சத்தை பார்த்த காலம், பின்னர் சந்தித்த சவால்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் போன்ற பல விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சோனாவின் மிகப்பெரிய பலம் அவரது வெளிப்படைத்தன்மை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். பலர் தவிர்க்கும் கேள்விகளுக்கும் தயங்காமல் பதிலளிக்கும் அவர், இந்த முறையும் பிரேம்ஜி தொடர்பான சர்ச்சைக்கு எந்த தயக்கமும் இல்லாமல் விளக்கம் அளித்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த காதல் மற்றும் திருமண வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பயோபிக் படம் வெளியாகும் முன்பே சோனா அளித்து வரும் இந்த அதிரடி பேட்டிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அவரது வாழ்க்கையில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் வெளியாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.நடிகை சோனா பேட்டி
பிரேம்ஜி பற்றிய சர்ச்சை
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா
சர்ச்சைகளால் சூழப்பட்ட வாழ்க்கை
நடிகை சோனா பயோபிக்
அப்பா செய்த செயல்! வடிவேலு உடன் மீண்டும் நடிப்பதை விட பிச்சை எடுத்து வாழ்வேன்! நடிகை சோனா ஆதங்கம்
ஓபனான பேச்சு