சென்னை: நடிகர் அஜித்குமாரின் அம்மா சமீபத்தில் காலமானது அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தாயாரின் மறைவுக்கு பிறகு அஜித்தின் சகோதரர் அனுப் குமார் தனது தாயார் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டு பலரையும் கண்கலங்க வைத்திருந்தார்.
அந்த பதிவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு நீண்ட பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. இந்த முறை தனது குடும்ப துயரம், அரசியல் ஆதரவாளர்கள், சமூக வலைதள விமர்சனங்கள் மற்றும் பொதுமக்களின் மனநிலை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சமீபத்தில் தாம் வெளியிட்டிருந்த ஒரு ரீலை, ஒரு பிரபல தனியார் செய்தி நிறுவனம் அனுமதியின்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததாக அனுப் குமார் குற்றம்சாட்டியிருந்தார். அதுகுறித்து அவர் சோசியல் மீடியாவில் தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு அந்த பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் எதிர்பாராத விதமாக சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. இந்த விவகாரத்தில் பலரும் அனுப் குமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அந்த ஊடக நிறுவனத்தின் செய்தி வெளியீடுகள் குறித்து சில அதிருப்திகள் இருந்ததால், இந்த முறை தமக்கு ஆதரவு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் "எதிரியின் எதிரி நண்பன்" என்ற நிலை உருவானது போல தனக்கு தோன்றியதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். தனது பதிவில் ஹாலிவுட் திரைப்படமான Gladiator படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தையும் அனூப் குமார் குறிப்பிட்டுள்ளார். "The mob is fickle, brother" (கூட்டம் எப்போதும் மாறக்கூடியது, சகோதரா) என்ற வசனம் இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு மீண்டும் நினைவுக்கு வந்ததாக அவர் எழுதியுள்ளார். ஏனெனில் இன்று பாராட்டுபவர்கள் நாளை விமர்சிக்கவும் வாய்ப்புள்ளது என்றும், சமூக வலைதள ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டுமே நிரந்தரமானவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஜித் - விஜய் ரசிகர்கள் இடையிலான போட்டி குறித்து மறைமுகமாக குறிப்பிட்ட அனுப் குமார், தற்போது தன்னை பாராட்டும் சிலர் கடந்த காலங்களில் வேறு காரணங்களுக்காக தன்னை விமர்சித்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், பொதுமக்களின் மனநிலை எப்போதும் மாறக்கூடியது என்பதையே இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். தனது தாயார் மறைவுக்கு பிறகு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதை அனுப் குமார் தனது பதிவில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அனுப்பிய ஆறுதல் செய்திகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். "எங்கள் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறிய முதலமைச்சரின் அன்பான செயல் என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதே நேரத்தில் அனைத்து அரசியல் தரப்பிலிருந்தும் வந்த ஆறுதல் செய்திகளையும் நான் மதிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவில் மிக முக்கியமான விஷயமாக, தாம் எந்த அரசியல் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அனுப் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். "நான் என் கருத்துக்களை சுதந்திரமாக சொல்கிறேன். ஏனெனில் நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன். எதிர்காலத்திலும் என் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவேன். அதனால் எல்லா தரப்பினருடனும் கருத்து மோதல்கள் ஏற்படலாம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையின் குணத்தை நினைவுகூர்ந்த அனுப் குமார், "நான் என் தந்தையின் மகன். அவர் போலவே நேரடியாக பேசுவதை விரும்புகிறேன்" என்றும் கூறியுள்ளார். "அரசியலை என் தனிப்பட்ட பதிவுகளில் இருந்து விலக்குங்கள்" தனது பதிவின் இறுதியில் மிகவும் உணர்ச்சிகரமான வேண்டுகோளையும் அவர் முன்வைத்துள்ளார். "ஒரு சாதாரண மனிதனின் தனிப்பட்ட பதிவுகளில் அரசியலை கொண்டு வர வேண்டாம். நல்லவர்களாக இருங்கள். அதைவிட முக்கியமாக சமூக வலைதளங்களை விட்டு சிறிது நேரம் வெளியே சென்று உங்களுக்கு பிடித்தவர்களை கட்டிப்பிடியுங்கள். இந்த வாரம் நான் அதை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் அவரது தாயார் மறைவால் ஏற்பட்ட மனவேதனையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அம்மா மறைவால் ஏற்பட்ட இழப்பை இன்னும் கடந்து வர முடியாமல் தவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் உருவாகும் அரசியல் விவாதங்களிலிருந்து தனது குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையே அனுப் குமார் இந்த பதிவின் மூலம் முன்வைத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபல செய்தி சேனலுடன் ஏற்பட்ட சர்ச்சை
விஜய் ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு
"Gladiator" வசனம்
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம்
அனுப் குமார் கொடுத்த விளக்கம்
தந்தையை போல நேர்மை