பாக்யராஜ் உடலை கண்ணீருடன் சுமந்த சரத்குமார், பார்த்திபன்.. கதறி அழுத்த சாந்தனு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்


  • சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன், இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் அதிகாலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், திடீரென நெஞ்சுவலி இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்களின் முயற்சி பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

    Advertisement

    அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேற்று முழுவதும் அவரது இல்லத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், இன்று காலை அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    Advertisement

    மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்

    பாக்யராஜின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது, சாலையின் இருபுறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர். "திரைக்கதை மன்னன் அமரர்" என்ற முழக்கங்களும் அங்கு ஒலித்தன.

    சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தை நோக்கி நகர்ந்த இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    உடலை தோளில் சுமந்த சரத்குமார், பார்த்திபன்

    இறுதிச் சடங்கின் மிகவும் உருக்கமான தருணமாக, நடிகர் சரத்குமார், இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்ட நெருங்கிய திரையுலக நண்பர்கள் பாக்யராஜின் உடலை தோளில் சுமந்து சென்ற காட்சி அமைந்தது.

    Advertisement

    குருவுக்கு கடைசி மரியாதை செலுத்தும் விதமாக பார்த்திபன் கண்ணீரை அடக்க முடியாமல் நின்றார். நேற்று முதல் பாக்யராஜின் வீட்டிலேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த அவர், இறுதி ஊர்வலத்திலும் முழு நேரமும் குடும்பத்தினருடன் இருந்தார்.

    தந்தையை பார்த்து கதறி அழுத சாந்தனு

    அனைவரின் மனதையும் உருக்கிய காட்சி பாக்யராஜின் மகன் சாந்தனுவுடையது. தந்தையின் உடல் இறுதி பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அவரை கட்டிப்பிடித்து சாந்தனு கதறி அழுதார். அருகில் இருந்த உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு ஆறுதல் கூற முயன்றாலும், தந்தையை பிரியும் வேதனையை தாங்க முடியாமல் கண்ணீர் வடித்தார்.

    Advertisement

    சில நாட்களுக்கு முன்புதான் தந்தையின் 50 ஆண்டு திரைப்பயண விழாவில், "என்னுடைய ஆயுளில் இருந்து 10 வருடத்தை என் அப்பாவுக்கு கொடுத்திடுங்க" என்று உருக்கமாக பேசிய சாந்தனு, இன்று அதே தந்தையின் இறுதிச் சடங்கில் கண்ணீருடன் நிற்கும் காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

    இறுதி வழியனுப்பல்

    நேற்று பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பல திரையுலக பிரபலங்கள், இன்று இறுதிச் சடங்கிலும் மீண்டும் கலந்து கொண்டனர்.

    சரத்குமார், பார்த்திபன், பாண்டியராஜன், பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானோர் இறுதி வரை உடன் இருந்து அவருக்கு மரியாதை செலுத்தினர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், பாக்யராஜுடன் இருந்த பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

    Advertisement
    ”முட்டாள்” கொஞ்சம்கூட அறிவேயில்லையா? முருங்கைக்காய் கட்டுடன் வந்த கூல் சுரேஷ்! வெளுத்த நெட்டிசன்கள்

    அரசு மரியாதையுடன் இறுதி விடை

    தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றன.

    திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என தமிழ் சினிமாவில் தனக்கென அழியாத தடம் பதித்த பாக்யராஜ் இன்று உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் படைத்த கதைகளும், திரைக்கதைகளும், ரசிகர்களின் நினைவுகளும் என்றும் அழியாது என்பதே திரையுலகினரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

    English Summary

    Bhagyaraj: Legendary filmmaker and actor K. Bhagyaraj was laid to rest with full state honours in Chennai following his sudden demise. Thousands of fans, film personalities, and political leaders gathered to pay their final respects. One of the most emotional moments came when actors Sarathkumar and R. Parthiban carried Bhagyaraj's mortal remains during the funeral procession. His son Shanthanu broke down in tears while bidding farewell to his father, leaving many in attendance emotional. Police honours were accorded before the final rites were performed in the presence of family members and close friends. The funeral marked the end of an era for Tamil cinema, as the industry bid farewell to one of its greatest storytellers.