நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ


  • சென்னை: ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை ஆட்சி செய்தவர் நடிகை பானுப்பிரியா. அழகு, நடிப்பு, அபிநயம், பரதநாட்டியம் என அனைத்திலும் தனித்துவம் காட்டிய அவர், 80 மற்றும் 90-களில் இயக்குநர்களின் முதல் தேர்வாக இருந்தார். குறிப்பாக அவரது கண்களும், முகபாவனைகளும் ரசிகர்களை கட்டிப்போட்டவை. பல திரைப்படங்களில் பானுப்ரியாவின் கண்களை மட்டும் க்ளோஸ்-அப்பில் காட்டுவதற்காகவே தனி காட்சிகள் அமைக்கப்பட்டதாக கூட கூறப்படுகிறது.

    Advertisement

    ஆனால் திரையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் அன்பைப் பெற்ற அந்த நடிகையின் நிஜ வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை என்பதையே நடிகை குஷ்பூ சமீபத்தில் பேசியிருக்கிறார்.

    Advertisement

    80ஸ் ரீயூனியனில் மட்டும் பானுப்ரியா இல்லை

    கடந்த சில ஆண்டுகளாக 80-களின் நடிகர், நடிகைகள் ஆண்டுதோறும் ஒன்று கூடி 'ரீயூனியன்' கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காணாமல் போகும் ஒரு பெயர் பானுப்ரியா. ஏன் அவர் மட்டும் வருவதில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது.

    அதற்கு பதில் அளித்த குஷ்பூ, "நாங்கள் பானுப்ரியாவை இரண்டு, மூன்று முறை ரீயூனியனுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. அவர் யாருடனும் அவ்வளவு எளிதாக பழக மாட்டார். படப்பிடிப்புத் தளத்தில்கூட தனியாகத்தான் இருப்பார். சினிமாவில் பானுப்ரியாவின் நண்பர்கள் யார் என்று கேட்டால் யாரும் இல்லை என்றுதான் சொல்ல முடியும். அவர் எப்போதும் எல்லோரிடமிருந்தும் சற்று விலகியே இருப்பார்" என்று கூறியுள்ளார். இந்த ஒரு கருத்தே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    Advertisement

    திரையில் ஆயிரம் உறவுகள்

    திரைப்படங்களில் குடும்ப பாசம், காதல், நட்பு என பல உணர்ச்சிகளை உயிர்ப்புடன் வெளிப்படுத்திய பானுப்ரியா, நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான மற்றும் தனிமையை விரும்பும் நபராக இருந்ததாக பலரும் கூறியுள்ளனர்.

    திரைத்துறையில் பல ஆண்டுகள் இருந்தும், பெரிய நட்பு வட்டம் இல்லாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. வெளிச்சத்திற்குள் வாழ்ந்த ஒரு நடிகை, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியையும் தனிமையையும் தேர்வு செய்தது அவரது குணநலனையே வெளிப்படுத்துகிறது.

    நடனத்தால் உலகை மயக்கிய நடிகை

    1980-களில் அறிமுகமான பானுப்ரியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    Advertisement

    பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற அவர், திரையில் ஆடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பல விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்தது.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த அவர், ஒரு தலைமுறையின் கனவு நாயகியாக திகழ்ந்தார்.

    வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள்

    பானுப்ரியாவின் வாழ்க்கை குறித்து முன்பு பேசிய சில திரையுலக பிரபலங்கள், அவரது குடும்ப வாழ்க்கையில் பல சவால்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். திருமண வாழ்க்கை, வெளிநாட்டு வாழ்க்கை, உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஒரு காலத்தில் தினமும் கேமரா வெளிச்சத்தில் இருந்த நடிகை, பின்னர் பொதுவெளியில் அரிதாகவே தோன்ற ஆரம்பித்தார். இதுவும் அவரை பற்றிய பல கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது.

    இவ்வளவு நாள் ஆண்டவங்களால செய்ய முடியாததை... உடனே விஜய் எப்படி செய்வார்? குஷ்பூ ஓபன் டாக்!

    ரசிகர்களை கலங்க வைத்த பேச்சு

    "பானுப்ரியாவுக்கு நண்பர்களே இல்லை" என்ற குஷ்பூவின் வார்த்தை தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அது ஒரு விமர்சனமாக அல்லாமல், ஒரு திறமையான நடிகையின் தனிமையான வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்தாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

    Advertisement
    யார் என்ன சொன்னாலும்.. ஆர்த்தியுடன் குஷ்பூ! ஒரு போட்டோவால் கிளம்பிய சர்ச்சை! ரசிகர்கள் கேட்ட கேள்வி

    ஒரு காலத்தில் தனது கண்களாலும், நடனத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை மயக்கிய பானுப்ரியா இன்று திரையுலக நிகழ்ச்சிகளில் கூட அரிதாகவே காணப்படுகிறார். ஆனால் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், ரசிகர்களின் மனதில் பதிந்த நினைவுகளும் இன்னும் அழியாமல் இருக்கின்றன.

    English Summary

    Veteran actress Bhanupriya, once celebrated as one of South Indian cinema’s most talented performers, has become the subject of discussion after actress Khushbu shared insights into her private life. Speaking about the popular 80s reunion gatherings attended by many legendary actors and actresses, Khushbu revealed that Bhanupriya has consistently stayed away despite being invited multiple times.According to Khushbu, Bhanupriya has always been a reserved person who preferred to keep to herself, even during her active years in the film industry. She explained that the actress rarely socialized with colleagues and generally maintained a distance from the larger film fraternity.Bhanupriya was one of the most sought-after actresses of the 1980s and 1990s, known for her expressive eyes, graceful Bharatanatyam performances, and powerful acting skills. She worked alongside several leading stars across Tamil, Telugu, Malayalam, Kannada, and Hindi cinema and earned widespread acclaim for her performances.Despite her immense popularity on screen, Bhanupriya reportedly led a quiet and private personal life. Over the years, she gradually reduced her public appearances, leading fans to wonder about her absence from industry events and celebrity gatherings.