சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கை சுற்றியும் பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியுள்ளன.
தேனியில் அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அதே நேரத்தில், குடும்ப உறுப்பினர்களைச் சுற்றி சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் சில வீடியோக்களில், பாரதிராஜாவின் மகள் ஜனனி, கூட்டத்தில் அமர்ந்திருந்த பாரதிராஜாவின் மருமகள் நந்தனாவின் கையைப் பிடித்து இழுத்து, அந்த இடத்தை விட்டு போகுமாறு சொல்வது போல இருக்கிறது. உடனே நந்தனா அந்த இடத்தை விட்டு கிளம்ப அப்போது ஜனனி நந்தனாவின் கைகளை முறுக்கியது போல காட்சிகள் இருக்கிறது. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த நடிகை ராதிகா சரத்குமார் சென்று சூழ்நிலையை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஜனனியிடம் அவர் அமைதியாக இருக்க சொல்ல, அதற்கு ஜனனி கோபப்பட்டு கத்துவது போன்ற காட்சிகளும் இருக்கிறது. பிறகு தன்னுடைய இரண்டு மகள்களுடன் அங்கிருந்து அழுதப்படியே நந்தனா வெளியே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வீடியோவின் முழுமையான பின்னணி என்ன? உண்மையில் என்ன நடந்தது? என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இறுதிச்சடங்கின்போது ஏற்பட்டதாக கூறப்படும் அந்த சம்பவத்திற்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே நந்தனா தனது இரண்டு மகள்களுடன் அழுதபடியே அங்கிருந்து வெளியேறியதாகவும் சில சமூக வலைதள பதிவுகள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்தும் குடும்பத்தினர் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இதனால் உண்மை எது, வதந்தி எது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த சூழ்நிலையில்தான் இயக்குநர் கங்கை அமரன் இறுதிச்சடங்கில் பேசிய வார்த்தைகளும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. "கடைசியில் அவரை தனியாக விட்டுட்டீங்களே..." என்ற அவரது ஆதங்கம் கலந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வார்த்தைகள் வெறும் நண்பரின் துயர வெளிப்பாடா? அல்லது குடும்ப சூழ்நிலைகளை பார்த்து வந்த வேதனையா? என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பி வருகின்றனர். பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகு, அவரது சொத்துக்கள், வாரிசுகள், குடும்ப உறவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சில யூடியூப் சேனல்கள் மற்றும் தனிப்பட்ட கருத்தாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிவருகின்றனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் மறைவுக்குப் பிறகு, அவரது சாதனைகள் மற்றும் சினிமாவுக்கான பங்களிப்புகளை பேசுவதற்கு பதிலாக, குடும்ப விவகாரங்கள் அதிகம் பேசப்படுவது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. "கருத்தம்மா, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படைப்புகளை தந்த ஒரு மகத்தான கலைஞரை அவரது சாதனைகளுக்காக நினைவுகூர வேண்டும்" என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. இதற்கிடையில் வைரலாகும் வீடியோக்கள், கங்கை அமரன் பேசிய வார்த்தைகள், சொத்து விவகாரம் குறித்த பேச்சுகள் என பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகும் அவரைச் சுற்றிய விவாதங்கள் ஓயாமல் தொடர்கின்றன. ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து குடும்பத்தினர் தரப்பில் ஏதேனும் விளக்கம் வருமா என்பதுதான் தற்போது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.வைரலாகும் வீடியோ
நந்தனா வெளியேறினாரா?
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு
கங்கை அமரன் பேசிய வார்த்தைகள்
சொத்து விவகாரம் குறித்து தொடரும் பேச்சு
பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி