பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு


  • சென்னை: தமிழ் சினிமாவின் மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள நீண்ட இரங்கல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அந்த நேரத்தில் நடிகை ராதிகா சரத்குமார், கவிப்பேரரசு வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் அங்கு இருந்தனர்.

    Advertisement

    இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மு.க.ஸ்டாலின், பாரதிராஜாவுடனான தனது நினைவுகளையும், தமிழ் சினிமாவுக்காக அவர் செய்த பங்களிப்புகளையும் விரிவாக பதிவு செய்துள்ளார்.

    மு க ஸ்டாலின் பதிவு

    தனது பதிவில், "தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய 'இயக்குநர் இமயம்' திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழ் சினிமா இன்று ஒரு சகாப்தத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து தமிழ்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்" என்ற வரிகள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    Advertisement

    16 வயதினிலே முதல் கருத்தம்மா வரை

    பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்து நினைவுகூர்ந்த முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், "16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளை தமிழ்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவரும் தவிர்க்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கலைஞர் மீது தனி பாசம் கொண்ட பாரதிராஜா

    பாரதிராஜா வெறும் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல; தமிழ் மொழி, தமிழர் உரிமை, சமூக பிரச்சினைகள் போன்றவற்றிலும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்பதை ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். "தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு" என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    என்றும் அழியாத கூட்டணி

    தமிழ் சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டணியான பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியையும் ஸ்டாலின் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.

    "இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும் ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மருத்துவமனையில் நடந்த சந்திப்பு

    இந்த பதிவில் ரசிகர்களை அதிகம் நெகிழ வைத்த பகுதி, பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்த நினைவுகளை ஸ்டாலின் பகிர்ந்திருப்பதுதான்.

    சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜாவை, மு.க.ஸ்டாலின் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இருவரும் நேரில் சென்று சந்தித்திருந்தனர்.

    Advertisement

    அப்போது பாரதிராஜாவின் கையை பிடித்தபடி உடல்நலம் குறித்து விசாரித்த ஸ்டாலின், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
    அந்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

    ஆனால் அந்த சந்திப்பே தங்களின் கடைசி சந்திப்பாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. "இப்போது நினைத்தாலே நெஞ்சம் பாரமாகிறது".... இதுகுறித்து தனது பதிவில் ஸ்டாலின்,

    "அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களை தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement
    Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்!

    அரசு மரியாதையுடன் இறுதி வழியனுப்பு?

    பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தியபோது, அங்கு இருந்த குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையில் இறுதி சடங்கு நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

    English Summary

    The death of legendary filmmaker Bharathiraja has left Tamil Nadu and the film industry in deep mourning. Paying his final respects, M. K. Stalin visited Bharathiraja’s residence, offered floral tributes, and comforted the bereaved family. In a heartfelt statement, Stalin described Bharathiraja as the filmmaker who transformed Tamil cinema by taking cameras out of studios and into the villages, bringing authentic rural life to the big screen. He highlighted classics such as 16 Vayathinile, Kizhakke Pogum Rail, Alaigal Oivathillai, Mudhal Mariyadhai and Karuthamma as timeless contributions to cinema. Stalin also remembered Bharathiraja’s deep affection for former Chief Minister M. Karunanidhi and his involvement in Tamil cultural and social causes. Recalling his recent visit to Bharathiraja during a hospital stay, Stalin said those memories now make his heart feel even heavier. His emotional tribute has resonated widely with fans, many describing Bharathiraja’s passing as the end of a historic chapter in Tamil cinema.