உதயநிதியால் பட்ட அவமானம்.. பழி தீர்க்க தான் விஜய் அரசியலுக்கு வந்தாரா? ஜேம்ஸ் வசந்தன் சொன்ன காரணம்


  • சென்னை: முதலமைச்சர் விஜய்யை ஆரம்பத்திலிருந்தே ஓபன் ஆக விமர்சித்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தற்போது கூறியிருக்கும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் பயணம் சாதாரண ஆசை அல்ல; அது ஒரு "அதிகார வெறி"யின் விளைவு என்கிற வகையில் ஜேம்ஸ் வசந்தன் பேசியிருப்பது, விஜய் ரசிகர்களையும் அரசியல் வட்டாரங்களையும் ஒரே நேரத்தில் கவனிக்க வைத்திருக்கிறது.

    Advertisement

    சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், விஜய்யின் அரசியல் வருகை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் சொல்வதன்படி, விஜய் அரசியலுக்கு வந்தது மக்கள் சேவை, கொள்கை, மாற்றம் போன்ற வார்த்தைகளால் மட்டும் விளக்க முடியாத விஷயம்; அதன் பின்னால் "ஒருநாள் அந்த இடத்துக்கு நானும் வரவேண்டும்" என்ற அதிகார மனநிலையும் இருந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஜேம்ஸ் வசந்தம் பேச்சு

    அதில் மேலும் பேசும்போது, என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு விஷயத்தை சொன்னார். அதாவது, ஒருமுறை உதயநிதி ஸ்டாலின் செல்லும் போது விஜய்யின் கார் ரோட்டில் தடுத்து நிறுத்தப்பட்டதாம், அதுதான் விஜய்க்கு அரசியல் வெறி உருவாக காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்திருக்கிறார்.

    "பதவி இருக்கிறதால்தான் ஆட்டம் போடுறீங்களா? ஒரு நாள் நானும் அந்த இடத்துக்கு வரேன்" என்ற மனநிலை அப்போது விஜய்க்குள் உருவாகி, அதுவே இன்று முதலமைச்சர் பதவிவரை கொண்டு வந்திருக்கலாம் என்ற லைனில்தான் அவர் பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    தற்போதைய அரசியல் சூழல்

    இந்த பேச்சு இப்போது ஏன் அதிகமாக பேசப்படுகிறது என்றால், அதன் டைமிங்கே அதற்கு காரணம். ஏனென்றால், கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் விஜய் மையப் புள்ளியாக மாறியிருக்கிறார். சட்டசபையில் அமைதியாக இருக்கிறார், பேசவே தெரியாதா, வெறும் சினிமா ஸ்டைலில்தான் வருவாரா என்று விமர்சனம் செய்து வந்த எதிர்க்கட்சிகளுக்கு, சமீபத்திய பேரவை உரையில் விஜய் அடியாக பதிலடி கொடுத்தார் என்ற கருத்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    முதல்வர் விஜய் உதயநிதிக்கு ஸ்பேஸ் கொடுத்தார்.. சைலண்டாக கவனித்தது இதற்குத்தான்.. இப்போ தெரியுதா? நடிகர் ஷாம் ஓபன்
    Advertisement

    குறிப்பாக திமுக மீது நேரடியாக குற்றச்சாட்டுகள் முன்வைத்து, "பார்ட்டி ஃபண்ட்" உள்ளிட்ட விஷயங்களை சட்டசபை மேடையிலேயே எடுத்துக்கூறிய பிறகு, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை "விஜய் பேச மாட்டார்" என்று கூறியவர்கள் கூட, இப்போது அவர் அரசியல் மொழியில் அடிக்கத் தொடங்கிவிட்டார் என பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில்தான் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ள இந்த "அதிகார வெறி" பின்னணி மேலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    விஜய்யின் அரசியல் பயணத்தைப் பார்த்தாலே இந்த விவாதம் ஏன் பெரிதாகிறது என்பது புரியும். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் தரத்தில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அதே ரசிகர் வலையமைப்பை மெதுவாக அரசியல் அடித்தளமாக மாற்றி, தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கினார். தேர்தலில் முதல் முறை களமிறங்கியபோதும் அது சாதாரண முயற்சியாக இல்லாமல், ஆட்சியை நேரடியாக குறிவைத்த பாய்ச்சலாக இருந்தது. அந்த முயற்சிதான் இன்று அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருக்கையில் உட்கார வைத்திருக்கிறது.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    இதனால் தான் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ள கருத்தை சிலர் "சர்ச்சைக்காக சொன்ன பேச்சு" என்று பார்க்க, இன்னும் சிலர் "விஜய்யின் மனநிலையை வேறொரு கோணத்தில் வாசிக்க முயற்சித்திருக்கிறார்" என்றும் கூறுகிறார்கள். குறிப்பாக விஜயின் அரசியல் பாணியை கவனிக்கும் சிலர், "அவர் எப்போதுமே சும்மா வரவில்லை; நேராக டாப் போஸிஷனை மட்டுமே குறிவைத்தார். அதனால் இந்த பேச்சை முழுக்க முழுக்க நிராகரிக்க முடியாது" என்ற கருத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

    “போஸ்டர் ஒட்டுனவங்க, பிளாக்ல டிக்கெட் வித்தவங்க.. தான் இப்போ அமைச்சரா?” ஜேம்ஸ் வசந்தன் பேச்சால் சூடான விஜய் அரசு
    Advertisement

    மறுபக்கம், விஜய் ரசிகர்கள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். "ஒரு நடிகர் அரசியலுக்கு வரும்போது அவரை யாரோ தடுத்ததால் வந்தார் என்று சொல்வது சுலபம். ஆனால் தேர்தலில் ஜெயித்து, கூட்டணியை அமைத்து, ஆட்சியை பிடித்து, சட்டசபையில் எதிர்க்கட்சியை நேரில் எதிர்கொள்ளும் அளவுக்கு வந்திருப்பது வெறும் 'வெறி'யால் மட்டும் முடியாது" என்பதே அவர்களுடைய வாதம்.

    English Summary

    James Vasanthan: Music composer James Vasanthan, who has repeatedly criticised Chief Minister Joseph Vijay ever since his political rise, has now made another explosive claim — and this time, it is about the very reason Vijay may have entered politics.In a recent interview, James Vasanthan reportedly suggested that Vijay’s political journey was not driven only by public service, ideology or a desire for change. Instead, he hinted that there may have been a strong personal power impulse behind it — even going as far as to describe it as a form of “authority obsession” or a deep urge to reach a position of power.