சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன், கடந்த சில மாதங்களாக தனது சினிமா கேரியரை விட தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறார். மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து வழக்கு, அதனைத் தொடர்ந்து வெளிவந்த குற்றச்சாட்டுகள் என இவை அனைத்தும் அவரை தொடர்ந்து செய்திகளில் வைத்திருக்கின்றன. இந்த பரபரப்பான சூழலிலேயே தற்போது ரவி மோகன் எடுத்திருக்கும் ஆன்மீக முடிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருகாலத்தில் ஜெயம் ரவி என்ற பெயரிலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரவி மோகன், குடும்ப நாயகன் என்ற இமேஜுடன் நீண்ட காலமாக இருந்தவர். ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஆனால் சமீபகாலமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை பெரிய விவாதமாக மாறியது. மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், சமீபத்தில் ஊடகங்களை சந்தித்த ரவி மோகன் சில அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான் ரவி மோகன் சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்காக 41 நாள் விரதத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு மனமுருகி சாமி தரிசனம் செய்தார். பின்னர் போகர் சன்னதி, ஆனந்த விநாயகர் சன்னதி உள்ளிட்ட இடங்களிலும் வழிபட்டார். ரசிகர்கள் பலரும் அவரை நேரில் பார்த்ததும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சமீபத்திய சர்ச்சைகளால் மனஅழுத்தத்தில் இருந்தவர் போல தெரிந்த ரவி மோகன், இந்த தரிசனத்தில் அமைதியாகவும் நெகிழ்ச்சியுடனும் காணப்பட்டதாக அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர். கோவில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், "சின்ன வயசுல பழனி வந்திருக்கேன். அதுக்கப்புறம் இப்போதான் மீண்டும் வந்திருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட வந்தவர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைச்சது. மீண்டும் மீண்டும் வரணும் போல இருக்கு. எல்லாரும் நல்லா இருக்கணும் னு வேண்டிக்கிட்டேன்" என்று மனமார பேசினார். இந்த பேச்சு, சமீபத்தில் அவர் சந்தித்துள்ள மனநிலையை மறைமுகமாக காட்டுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த அமைதியான தருணத்திலேயே ஒரு செய்தியாளர் தமிழக முதல்வர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக ரவி மோகன், "கோவிலில் வந்து என்னங்க இது?" என்ற முகபாவனையுடன் அந்த கேள்வியை தவிர்த்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "சரியான இடத்தில் சரியான பதில்", "கோவிலுக்கு வந்த இடத்துல அரசியல் வேண்டாம்னு சொல்லிட்டாரு" என்று சிலர் பாராட்ட, இன்னும் சிலர் "ஏன் தவிர்த்தார்?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் ரவி மோகன் அளித்த சில பேட்டிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியது மட்டுமல்லாமல், சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததால் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. பல ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர் திடீரென இவ்வளவு வெளிப்படையாக பேசுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. அந்த பரபரப்புக்கு நடுவே அவர் தற்போது ஆன்மீக பாதையை தேர்வு செய்திருப்பது, மன அமைதிக்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஒருபுறம் விவாகரத்து சர்ச்சை... மறுபுறம் ஊடக பரபரப்பு... அந்த சூழலிலேயே பழனியில் அமைதியாக சாமி தரிசனம் செய்த ரவி மோகனின் இந்த வருகை இப்போது பெரிய பேசுபொருளாகியுள்ளது. அதிலும் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வியை ஒரே வரியில் 'ஆப்' செய்த சம்பவம், இந்த செய்தியை இன்னும் வைரலாக்கி விட்டது.சர்ச்சைகளால் சூழப்பட்ட ரவி மோகன்
ஆன்மீக பாதைக்கு திரும்பிய நடிகர்
ரவி மோகன் பேச்சு
சிறகடிக்க ஆசை: ரவி தூக்கி போட்ட குண்டு.. விஜயா சிந்தாமணி செம சண்டை.. மீனாவுக்கு புது பிரச்சனை
விஜய் கேள்விக்கு ஆப்
ஆண் மீது மட்டும் தவறு இல்லை.. ரவி மோகனுக்காக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா.. விவாகரத்து சர்ச்சையில் திருப்பம்
சமீபத்திய பேட்டிகள் ஏன் பரபரப்பு?