சென்னை: சில நடிகர்கள் பல படங்களில் நடித்தும் மறக்கப்பட்டு விடுவார்கள். ஆனால் சிலர் ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் நடிகர் கண்ணன்.
1982-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'காதல் ஓவியம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கண்ணன், அந்த ஒரு படத்தின் மூலமே தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார். இப்போது 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்ணன் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் திரைப்படங்களை கதை போல சுவாரஸ்யமாக அலசி சொல்லி வரும் விஜய் கேவி ஜிப்ரான், 'காதல் ஓவியம்' படத்தை பற்றி விரிவாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இன்றைய தலைமுறையினருக்கும் அந்த படத்தை கொண்டு சேர்க்கும் வகையில் வெளியான அந்த வீடியோ எதிர்பாராத அளவுக்கு கவனம் பெற்றது. அதை பார்த்த நடிகர் கண்ணனே ஜிப்ரானை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறார். "43 வருடங்களுக்கு பிறகும் இந்த படத்தை மறக்காமல் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி" என்று கண்ணன் கூறி இருக்கிறார் இந்த வீடியோவின் மூலம் நடந்த இன்னொரு சம்பவம் தான் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'காதல் ஓவியம்' படத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்த ராதாவும் அந்த வீடியோவை பார்த்திருக்கிறார். அதன்பிறகு நேரடியாக கண்ணனுக்கு போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு நாட்கள், பாரதிராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள், பட வெளியீட்டின் போது நடந்த சம்பவங்கள் என நீண்ட நேரம் பேசிக் கொண்டதாக கண்ணன் பகிர்ந்துள்ளார். 43 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நட்பு தொடர்வது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்று பலர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைகிறார்கள். ஆனால் கண்ணனின் வாழ்க்கையில் ஹீரோ வாய்ப்பு வந்த விதம் வேற லெவல். ஒருநாள் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற பாரதிராஜா, கண்ணனை பார்த்திருக்கிறார். அவருடைய தோற்றம் பிடித்துப்போனதால் நேரடியாக அழைத்து 'காதல் ஓவியம்' படத்தின் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்ததாக கண்ணன் பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஒரு டீக்கடையில் தொடங்கிய அந்த சந்திப்பு, அவரை வெள்ளித்திரை ஹீரோவாக மாற்றியது. காதல் ஓவியம் படத்தில் கண் தெரியாத இளைஞராக நடித்திருந்தார் கண்ணன். அந்த கதாபாத்திரத்திற்காக கண்களை மேல்நோக்கி வைத்தபடி நடித்திருந்தார். அவருடைய நடிப்பு பாராட்டுகளை பெற்றாலும் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதுகுறித்து கண்ணன் மனம் திறந்து பேசியபோது, "அந்த காலத்தில் நான் அழகாக இருந்தேன். ஆனால் இந்த படத்தில் கண் தெரியாதவராக நடித்ததால் ரசிகர்களுக்கு என்னை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்திருக்கலாம். படத்தின் தோல்வி என்னை ரொம்ப பாதித்தது" என்று கூறியிருந்தார். படம் தோல்வியடைந்த பிறகும் அவர் முயற்சியை கைவிடவில்லை. பாக்யராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சினிமாவிலிருந்து விலகி வெளிநாட்டுக்கு சென்றார். அமெரிக்காவில் செட்டில் ஆனாலும், சினிமா மீதான காதல் மட்டும் குறையவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "இப்போதும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க தயார்" என்று கண்ணன் கூறியிருந்தார். அதன்பிறகு அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதை பார்த்த ரசிகர்கள், "இவரா அந்த காதல் ஓவியம் ஹீரோ?", "60 வயசுல கூட இவ்வளவு ஸ்டைலா இருக்காரே!", "அடையாளமே தெரியலையே!" என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். காதல் ஓவியம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த படத்தின் பாடல்கள் இன்னும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளன. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரேடியோ, யூடியூப், இசை நிகழ்ச்சிகள் என எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால், படம் மறைந்தாலும் இசை அந்த படத்தை உயிரோடு வைத்திருக்கிறது. இன்றைய சமூக வலைதள காலத்தில் ஒரு பழைய வீடியோ, ஒரு ரிவ்யூ, ஒரு தொலைபேசி அழைப்பு... இந்த மூன்றும் சேர்ந்து 43 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு படத்தையும், அதில் நடித்த ஒரு நடிகரையும் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் திரையரங்கில் கைதட்டல் வாங்கிய கண்ணன், இன்று மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி இருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில முகங்கள் வயதாகலாம்... சில படங்கள் தோற்றிருக்கலாம்... ஆனால் சில நினைவுகள் மட்டும் ஒருபோதும் பழையதாகாது என்பதற்கு 'காதல் ஓவியம்' கண்ணன் ஒரு சிறந்த உதாரணம்.ஒரு ரிவ்யூ வீடியோ செய்த மாயம்
ராதாவிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ் கால்
டீக்கடையில் கிடைத்த ஹீரோ வாய்ப்பு
வாழ்க்கையின் திருப்புமுனை
கலைஞர் எனக்கு கொடுத்த பட்டம்.. எம்ஆர் ராதா பொண்ணுனு சொல்ல கூட விடல.. ராதிகா உருக்கம்
வாய்ப்பு கேட்டு அலைந்த ஹீரோ
மீண்டும் நடிக்க தயார்
பாடல்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன
ரசிகர்களை நெகிழ வைத்த கண்ணன்