“கயல் சீரியலில் பெரிய மாற்றம்… மறைந்த சுபாஷினியின் இடத்தை பிடித்த ரோஜா சீரியல் நடிகை” இனி தான் பிரச்சனை!


  • சென்னை: சன் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் 'கயல்' சீரியல், கடந்த சில மாதங்களாக கதைக்காக மட்டும் இல்லாமல், திரைக்குப் பின்னாலான ஒரு வேதனையான சம்பவத்தாலும் அதிகம் பேசப்பட்டது.

    Advertisement

    மறைந்த சீரியல் நடிகை

    அந்த சீரியலில் தீபா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுபாஷினி பாலசுப்ரமணியம் திடீரென உயிரிழந்த சம்பவம், சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் முழுமையாக வெளியே வராத நிலையில், தற்போது கயல் சீரியலில் சுபாஷினி நடித்த கதாபாத்திரத்திற்கு புதிய நடிகை என்ட்ரி கொடுக்கிறார்.

    Advertisement

    கயல் சீரியல் பயணம்

    சன் டிவியில் 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியல், தற்போது 1500 எபிசோடுகளை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் உள்ளிட்டோரின் நடிப்பால் இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகி விட்டது. அந்த சீரியல் முக்கியமான துணை கதாபாத்திரமாக வந்த தீபா ரோலிலும் சுபாஷினி தனது நடிப்பால் கவனம் பெற்றிருந்தார். ஆனால் ஏப்ரல் மாதத்தில் அவர் திடீரென மறைந்த செய்தி வெளியானதும், 'கயல்' ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சியாக மாறியது.

    சீரியல் நடிகை சுபாஷினி மறைவு

    36 வயதான சுபாஷினி, இலங்கையை சேர்ந்தவர் என்றும், நடிப்பு வாய்ப்புகளுக்காக சென்னை வந்து சின்னத்திரை பயணத்தை கட்டியெழுப்பியவர் என்றும் அப்போது வெளியான தகவல்கள் கூறின. சென்னையின் அய்யப்பந்தாங்கலில் தங்கி வந்த அவர் உயிரிழந்த சம்பவம் தொலைக்காட்சி வட்டாரத்தையே உலுக்கியது.

    Advertisement

    சீரியல் நடிகை வந்தனா திருமண வாழ்க்கையில்.. சிவகார்த்திகேயன் செய்த செயல்! இப்படியும் நடந்ததாமே!
    'கயல்' மூலம் அதிகம் அறிமுகமான சுபாஷினியின் திடீர் மறைவுக்குப் பிறகு, அவரது ரசிகர்களும் அவர்களுடன் நடித்த நடிகர்களும் சமூக வலைதளங்களில் உருக்கமான அஞ்சலிகளை பகிர்ந்திருந்தனர். அவர் நடித்த கடைசி காட்சிகள், புகைப்படங்கள், பழைய வீடியோக்கள் என பல பதிவுகள் அப்போது வைரலாகி, "இவ்வளவு சீக்கிரம் போய்விட வேண்டியவரா?" என்ற வருத்தத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

    அந்த துக்கமான சூழ்நிலைக்குப் பிறகு, கயல் சீரியலில் தீபா கேரக்டர் இனி என்ன ஆகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. சில நாட்கள் அந்த கேரக்டர் இல்லாமலோ, குறைவான அளவிலோ நகர்ந்த நிலையில், இப்போது அதற்கு அதிகாரப்பூர்வமாக புதிய முகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 'ரோஜா' சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்த விஜே அக்‌ஷயா தான் இனி கயல் சீரியலில் தீபாவாக நடிக்கவுள்ளார்.

    Advertisement

    விஜே அக்ஷயா என்ட்ரி

    விஜே அக்‌ஷயா ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். 'ரோஜா' சீரியலில் அவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல கவனம் பெற்றது. அதோடு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மல்லி' மற்றும் 'ஆடுகளம்' சீரியலிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது 'கயல்' போன்ற பெரிய சீரியலில், அதுவும் ரசிகர்கள் செண்டிமெண்டாக நினைக்கும் ஒரு கதாபாத்திரத்திற்கு அவர் வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஆனால் இந்த மாற்றத்தில் ஒரு சின்ன சவாலும் இருக்கிறது. அது, சுபாஷினி மீது ரசிகர்களுக்கு இருந்த எமோஷனல் கனெக்ஷன். 'தீபா' என்ற பெயர் வந்தாலே கயல் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரப்போவது சுபாஷினிதான். அந்த இடத்தில் புதிய நடிகையாக அக்‌ஷயா எப்படி பொருந்தப் போகிறார், அந்த கேரக்டரை அவர் எப்படி எடுத்துச் செல்கிறார், ரசிகர்கள் அவரை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் இப்போது பார்க்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

    Advertisement
    சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா?

    மொத்தத்தில், 'கயல்' சீரியலில் இது ஒரு சாதாரண நடிகை மாற்றம் மட்டும் அல்ல. ரசிகர்களுக்கு இன்னும் மறக்க முடியாத சுபாஷினியின் இடத்தை நிரப்ப வருகிற புதிய முகம் என்பதால், இந்த மாற்றம் சின்னத்திரை வட்டாரத்தில் தனியாகவே பேசப்படுகிறது. சுபாஷினி இல்லாத வெற்றிடத்தை விஜே அக்‌ஷயா எவ்வளவு வெற்றிகரமாக நிரப்பப் போகிறார் என்பதே இப்போது 'கயல்' ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    English Summary

    Kayal Serial: Sun TV’s popular serial Kayal is now going through an emotional but important cast change, with actress Akshaya stepping in to play the role of Deepa, a character that was earlier portrayed by late actress Subashini Balasubramaniyam.