சென்னை: ஒரு காலத்தில் "குஷ்புவின் மகள் ரொம்ப குண்டாக இருக்கிறாரே" என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட அனந்திதா சுந்தர், இன்று "இவ்வளவு ஒல்லியாக எப்படி ஆனார்?" என்ற புதிய சர்ச்சையின் மையமாக மாறியிருக்கிறார். உடல் எடையை குறைத்ததற்காக பாராட்டுகளை விட விமர்சனங்களே அதிகமாக வந்த நிலையில், அதற்கு தற்போது மனம் திறந்து பதிலளித்துள்ளார் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா.
தமிழ் சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களுடன் வலம் வரும் குஷ்புவின் குடும்பம் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தில் இருக்கும். குறிப்பாக அவரது மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திதா ஆகியோர் சிறுவயதிலிருந்தே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தவர்கள்.
ஒரு கட்டத்தில் அதிக உடல் எடையால் இருவரும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். "குஷ்பு மகள்கள் அம்மாவைப் போலவே குண்டாக இருக்கிறார்கள்" என்ற பதிவுகள் இணையத்தில் பரவின. ஆனால் அந்த விமர்சனங்களுக்கு பதிலாக இருவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றி உடல் எடையை கணிசமாக குறைத்தனர். ஆனால் அதுவே இப்போது புதிய பிரச்சனையாக மாறியுள்ளது.
சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் "டபுள் ஆக்குபன்சி" படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனந்திதாவை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு காலத்தில் குண்டாக இருந்த அனந்திதா தற்போது மிகவும் ஒல்லியாக மாறியிருப்பதை பார்த்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. "குஷ்பு குடும்பமே Ozempic பயன்படுத்தியிருக்காங்க... அம்மா, இரண்டு மகள்களும் ஒரே மாதிரி உடல் எடையை குறைச்சிருக்காங்க... இது கண்டிப்பா மருந்து அல்லது சர்ஜரி... என்ற விமர்சனங்கள் குவிந்தன. சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, "குடும்பமே Ozempic பிராண்ட் அம்பாசிடர் மாதிரி இருக்காங்க" என்று கூட கிண்டல் செய்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அனந்திதா, ஒரே நாளில் உடல் எடையை குறைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "நானும் என் அக்காவும் ஒரு கட்டத்தில் மிகவும் அதிக உடல் எடை கொண்டிருந்தோம். அதனால் 16 வயதிலேயே உடல்நலப் பிரச்சனைகள் வந்தது. ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தால்தான் எடையை குறைக்க முடிவு செய்தேன்." "2018 அல்லது 2019 காலகட்டத்தில்தான் இந்த பயணம் தொடங்கியது. கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இது ஒரு இரவில் நடந்த மாற்றம் கிடையாது." என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அனந்திதா கூறிய மற்றொரு விஷயம் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. "கொரோனா காலத்தில் நாங்கள் வெளியே அதிகமாக வரவில்லை. அந்த மூன்று வருடங்களில் எவ்வளவு மாற்றம் நடந்தது என்பதை மக்கள் பார்க்கவில்லை. அதனால்தான் திடீரென்று பார்த்தவர்கள் அறுவை சிகிச்சை பண்ணிட்டாங்க, மருந்து போட்டாங்க என்று பேச ஆரம்பித்தார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு சந்தித்த விமர்சனங்கள் குறித்து பேசிய அனந்திதா, மிகவும் வருத்தத்துடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். "முன்னாடி என்னை குண்டுன்னு சொன்னாங்க. இப்போ ஒல்லியா ஆகிட்டேன்னு சொல்றாங்க." "என்னை பார்த்து திருநங்கை மாதிரி இருக்கிறாய் என்றும் சிலர் பேசுகிறார்கள்." உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் திருநங்கைகள் அவ்வளவு அழகாக இருப்பார்கள் ஆனால் எதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. "நான் முதல் முறை எடையை குறைத்த போது, எங்கள் சொந்தக்காரர் தான் எனக்கு சர்ஜரி பண்ணி வைத்தார் என்று கூட வதந்தி பரப்பினார்கள்." என்று அவர் கூறியுள்ளார். அத்துடன், "வெறுப்பு எப்போதும் நிற்காது என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன். நான் மற்றவர்களுக்காக எடையை குறைக்கவில்லை. எனக்காகவும் என் உடல்நலத்திற்காகவும் தான் குறைத்தேன்." நான் போஸ்ட் போட்டதும் 100 கமெண்ட் வருகிறது என்றால் அதில் 90 கமெண்ட் வருகிறது அதை பற்றி நான் இப்போது கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பலருக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அனந்திதா நடிகையாக அல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பு துறைகளில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 19 வயதிலேயே உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கிய அவர், தற்போது குஷ்புவுடன் இணைந்து தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். "டபுள் ஆக்குபன்சி" திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னாலும் அவரது பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அனந்திதா பகிர்ந்த மற்றொரு சம்பவமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல்வர் விஜய்யை முதல் முறையாக சந்தித்த அனுபவம் குறித்து அவர் பேசும்போது, "விஜய் சாரை முதல் முறையாக பார்த்த சந்தோஷத்தில் மயங்கி விழுந்துட்டேன். நான் கீழே விழப் போனபோது அவர் என்னை பிடித்துக் கொண்டார்." என்று கூறியிருந்தார். மேலும், "அக்கா அவந்திகாவின் திருமண அழைப்பிதழ் கொடுக்க விஜய் சாரை சந்தித்தோம். அப்போது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அக்கா தான் 'போதும்... போதும்...' என்று சொல்ல வேண்டிய நிலை வந்தது." என்று சிரித்தபடி கூறியிருந்தார்.குஷ்பு மகள் பேட்டி
விமர்சனங்கள்
ஏழு வருட போராட்டம்
கொரோனா காலம்
முதல்வராக ஜனநாயகன் விஜய்.. குஷ்பு வெளியிட்ட பதிவு! இது தொடக்கம் மட்டும் தான்! நயன்தாராவின் போஸ்ட்
திருநங்கை என விமர்சனம்
தெரியாத ரகசியம்
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு
விஜய்யை பார்த்து மயங்கிய அனந்திதா