சென்னை: நடிகை, அரசியல்வாதி என இரு துறைகளிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள குஷ்பூவின் குடும்பத்தில் தற்போது திருமணக் கொண்டாட்டக் களைகட்டியுள்ளது. குஷ்பூ - சுந்தர் சி தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திருமண அழைப்பிதழை முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கை வழங்கிய குஷ்பூ குடும்பம், தற்போது தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யையும் அவரது இல்லத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளது.
இந்த சந்திப்பின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்த குஷ்பூ உருக்கமான பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில், "எங்கள் குடும்பத்திற்கு மறக்க முடியாத ஒரு சிறப்பான நாள் இது. எனது அன்புத் தம்பியும், தமிழக முதலமைச்சருமான விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினோம்.
அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. குழந்தைகள் கூட அவரை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தனர். எவ்வளவு பிஸியான ஷெட்யூல் இருந்தாலும் எப்போதும் போல அன்பாகவும் பாசமாகவும் எங்களை வரவேற்றார். உங்கள் நேரம், அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்போதும் உங்களை நேசிக்கிறோம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக பல மாற்றங்கள் நடந்துள்ளன. குஷ்பூ தற்போது பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தனித்த அரசியல் பாதையில் பயணித்து வருகிறார். அரசியல் ரீதியாக இருவரும் வெவ்வேறு தளங்களில் இருந்தாலும், தனிப்பட்ட உறவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இந்த சந்திப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. உண்மையில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே குஷ்பூ பலமுறை பொதுவெளியில், "விஜய் எனக்கு தம்பி மாதிரி. நான் அவரை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகும் அந்த நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. அதேபோல் இயக்குநர் சுந்தர் சியும் பல்வேறு மேடைகளில் விஜய் குறித்து மரியாதையுடன் பேசியுள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தனிப்பட்ட நட்பை அரசியலுடன் கலந்து பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருந்த நேரங்களிலும், விஜய்யை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதையோ விமர்சிப்பதையோ குஷ்பூ - சுந்தர் சி தம்பதியினர் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் இருந்து உருவான இந்த நட்பு இன்று வரை தொடர்கிறது. விஜய்யின் வளர்ச்சிப் பயணத்தையும், அவரது குடும்பத்தின் முன்னேற்றத்தையும் அருகில் இருந்து பார்த்தவர்களில் குஷ்பூவும் ஒருவர். அதேபோல் குஷ்பூ குடும்ப நிகழ்வுகளிலும் விஜய் பலமுறை தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் தற்போது மகளின் திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மகள் அவந்திகாவின் திருமணத்தை முன்னிட்டு குஷ்பூ குடும்பம் தற்போது முழு வீச்சில் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் நேரில் சென்று அழைப்பு வழங்கி வருகின்றனர். மோடியைத் தொடர்ந்து விஜய்யையும் நேரில் சந்தித்து அழைப்பு வழங்கியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. "அரசியல் வேறு... பாசம் வேறு", "இதுதான் உண்மையான உறவு", "பல ஆண்டுகள் கடந்தும் மாறாத நட்பு", "குஷ்பூ குடும்பத்தின் மீது விஜய் வைத்திருக்கும் அன்பு தெரிகிறது" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் வேறு பாதைகளில் பயணித்தாலும், குடும்ப பாசத்தையும் நட்பையும் முன்னிலைப்படுத்திய இந்த சந்திப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அரசியல் வேறுபாடு
சுந்தர் சி-யும் அதே நிலைப்பாடு
விஜய் - குஷ்பூ குடும்ப நட்பு
திருமண வீட்டாக மாறிய குஷ்பூ இல்லம்
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்!
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?