சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ஹீரோ, ஹீரோயினாக மட்டும் இல்லாமல், மிகச் சிறிய கதாபாத்திரங்களிலேயே ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட முகங்களில் ஒருவர் தான் நடிகை பூவிதா. மைனா படத்தில் நடிகை அமலா பாலின் அம்மாவாக நடித்த அந்த முகம், பலருக்கும் இன்றும் மறக்க முடியாத ஒன்று. ஆனால் அந்த கதாபாத்திரத்தின் பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான வாழ்க்கை இருக்கிறது என்று பலருக்கும் தெரியாது.
பூவிதா சினிமாவுக்கு திட்டமிட்டு வந்தவர் அல்ல. ஆரம்பத்தில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென சுப்பிரமணியபுரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்க வந்த ஒருவர் பயந்து சரியாக நடிக்க முடியாத சூழலில், அவசரமாக பூவிதாவை அழைத்துச் சென்றதாக அவர் கூறியிருக்கிறார். அங்கு போன பிறகுதான் அது சாதாரண நிகழ்ச்சி இல்லை, சினிமா ஷூட்டிங் என்று தெரிந்ததாம். கையில் டயலாக் கொடுத்ததும் முதல் முதலில் பதட்டம் இருந்தாலும், மேடைகளில் பேசிய அனுபவம் உதவியதால் தைரியமாக நடித்துவிட்டாராம். அந்த ஒரு வாய்ப்பே அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சுப்பிரமணியபுரம் படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தவர்கள், மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு நேராக வீட்டுக்கே வந்து அழைத்தார்களாம். அதிலும் எமோஷனல் ஆன காட்சிகளில் உண்மையாக அடித்தே நடித்ததாக அவர் கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கும் அந்த சண்டைக் காட்சியில் வரும் வசனங்கள் கூட இயல்பாக வந்த உணர்ச்சிதான் என அவர் பகிர்ந்துள்ளார். பூவிதாவின் வாழ்க்கையில் அதிகம் பேசப்படும் விஷயம் இதுதான். மைனா படத்தில் அமலா பாலின் அம்மாவாக நடித்தபோது அவருக்கு வயது வெறும் 22 மட்டுமாம். அதை நினைத்து அவரே அதிர்ச்சியடைந்திருக்கிறார். "நானே இன்னும் இளம் பெண்... இன்னொரு இளம் நடிகைக்கு அம்மாவா?" என்று முதலில் யோசித்தாராம். ஆனாலும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து ஒப்புக்கொண்டாராம். அந்த படம் வெளியான பிறகு அவரை மக்கள் அடையாளம் காண ஆரம்பித்தது வேகமாக நடந்திருக்கிறது. சினிமாவில் டூப் இல்லாமல் இயல்பாக நடிக்க விரும்பும் நடிகைகளில் பூவிதாவும் ஒருவர். மைனா படத்தில் அருவாளுடன் வரும் காட்சியில் உண்மையாக காயம் ஏற்பட்டதாம். அதேபோல் வாகை சூட வா படத்திலும் கடினமான காட்சிகளை டூப் இல்லாமல் நடித்ததாக அவர் கூறியிருக்கிறார். கீழே விழும் காட்சிகள், மண்ணில் உருண்டு நடிப்பது, உடல் வலியைத் தாங்கி காட்சி முடிப்பது என பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் அனைவரையும் ஷாக் அடைய வைத்த விஷயம். 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பூவிதா, தற்போது அரசு பள்ளியில் சத்துணவு ஆசிரியராக (Nutrition Teacher) பணியாற்றி வருகிறார். சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அரசு வேலையை விட்டுவிட முடியாத நிலைதான் என அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். "சினிமாவும், அரசு வேலையும் ஒன்றாக சமாளிக்க ரொம்ப கஷ்டம். அதனால பல வாய்ப்புகளை விட்டுட்டேன்" என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி சீரியலுக்கே பூவிதாவை தேர்வு செய்திருந்தார்களாம். போட்டோஷூட் வரை முடிந்த பிறகும், மாதத்திற்கு 15 நாட்கள் சென்னை தங்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். ஆரம்பத்தில் சீரியல் ஒளிபரப்பானபோது கொஞ்சம் வருத்தமாக இருந்ததாம். ஆனால் தற்போது அதனை ஏற்றுக்கொண்டுவிட்டதாக கூறியுள்ளார். அரசு வேலையை விட மாட்டேன் என்று உறுதியாக இருக்கும் பூவிதாவும், ஒரு விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு வைத்திருக்கிறார். "இயக்குநர் பாலா படம் வாய்ப்பு வந்தா அரசு வேலையை கூட ராஜினாமா பண்ணிட்டு போயிடுவேன்!" என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார். சினிமாவில் பெரிய ஹீரோயினாக இல்லாவிட்டாலும், சின்ன கதாபாத்திரங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த பூவிதாவின் வாழ்க்கை உண்மையிலேயே சினிமாவை விட சுவாரஸ்யமானதாகவே தெரிகிறது.சினிமாவுக்கு வந்ததே திடீர் வாய்ப்பு
மாயாண்டி குடும்பத்தார் கொடுத்த திருப்புமுனை
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா
படத்துக்காக உண்மையிலேயே காயம்
சினிமாவை விட அரசு வேலை முக்கியம்
விஜய் டிவி சீரியல் வாய்ப்பும் கைநழுவியது
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா
பாலா படம் வந்தா வேலைக்கு ராஜினாமா