பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!


  • சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial june 4th episode) பல நாட்களாக ரசிகர்களை பதற வைத்த கதிரின் கைது விவகாரத்திற்கு இன்று பெரிய திருப்புமுனை கிடைத்துள்ளது. கதிரை சிறைக்கு அனுப்பிய குமாரின் பொய், இறுதியில் அவனுக்கே வினையாக மாறியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இன்று ஜூன் நான்காம் தேதிக்கான எபிசோட் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் அப்டேட்

    முத்துவேல் காயமடைந்த சம்பவத்துக்குப் பிறகு கதிர் மீது பழியை சுமத்தி போலீசில் புகார் அளித்த குமார், அனைவரையும் நம்ப வைத்திருந்தார். இதனால் கதிர் சிறைக்கு சென்றதோடு, பாண்டியன் குடும்பமும் கடும் வேதனையில் தவித்தது. ஆனால் உண்மை எவ்வளவு நாட்களுக்கு மறைந்திருக்கும்?

    Advertisement

    பயத்தில் விபரீத முடிவெடுத்த குமார்

    மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துவேல் கண்விழித்துவிட்டால், தன்னுடைய நாடகம் அம்பலமாகிவிடும் என்ற பயம் குமாரை ஆட்கொள்கிறது. அதனால் அதிர்ச்சிகரமான முடிவை எடுக்கிறார்.

    நேராக முத்துவேல் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கும் ரூமிற்கு சென்ற குமார், முத்துவேலின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்த செயற்கை சுவாச கருவியை அகற்ற முயற்சி செய்கிறார். ஒரே நொடியில் நடந்த இந்த சம்பவம் ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஆனால் விதி வேறு மாதிரி விளையாடுகிறது.

    அந்த நேரத்தில் அங்கு வந்த சக்திவேல், குமாரை கையும் களவுமாக பார்த்துவிடுகிறார். "டேய்... என்னடா பண்ணிட்டு இருக்க?" என்று கோபமாக கேட்க, குமார் வாயே திறக்க முடியாமல் பதறிப்போகிறார். அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தாலும், அவனுடைய முகத்தில் இருந்த பயம் அனைத்தையும் சொல்லிவிடுகிறது.

    Advertisement

    உடைந்த குமாரின் பொய்

    சக்திவேலிடம் உண்மையை சொல்லிவிடலாமா என குமார் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், போலீசார் ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் குமார் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

    இதையடுத்து போலீசார் நேராக முத்துவேலிடம் விசாரணையை தொடங்குகிறார்கள். "உங்களை தள்ளியது கதிர்தானா?" என்று போலீஸ் கேட்ட கேள்விக்கு, ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த பதிலை முத்துவேல் கொடுக்கிறார். "இல்லை... என்னை தள்ளியது குமார் தான்!"என்று முத்துவேல் சொல்கிறார்.

    இந்த ஒரு வரி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அங்கு நின்றிருந்த சக்திவேல் கூட இதைக் கேட்டு அதிர்ச்சியில் வாயடைத்துப் போகிறார். கதிர் நிரபராதி என தெரிந்ததும் நடந்த எமோஷனல் சீன்!

    Advertisement

    முத்துவேல் கூறிய உண்மை சில நிமிடங்களில் குடும்பம் முழுவதும் பரவுகிறது. மருத்துவமனைக்கு வந்த கோமதி, ராஜி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். இதுவரை கதிரை தவறாக நினைத்த சக்திவேலிடம், "அவசரப்பட்டு என் புள்ளைய சந்தேகப்பட்டுட்டியே அண்ணே..." என்று கோமதி வருத்தத்துடன் பேசும் காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

    சிறை கதவு திறந்தது

    முத்துவேலின் வாக்குமூலம் கிடைத்த உடனேயே பாண்டியன் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து செல்கிறார். அங்கு நிரபராதி என்பது உறுதியானதால், கதிர் விடுதலை செய்யப்படுகிறார்.

    பல நாட்கள் மனவேதனையில் இருந்த குடும்பத்திற்கு இது மிகப்பெரிய நிம்மதியை கொடுக்கிறது. வீட்டிற்கு திரும்பும் கதிரை வரவேற்க கோமதி, ராஜி, அரசி உள்ளிட்டோர் வாசலில் காத்திருக்கும் காட்சி உணர்ச்சிகரமாக அமைந்தது. கதிர் வீட்டுக்குள் நுழைந்ததும் குடும்பத்தினர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, ரசிகர்களின் மனதையும் தொட்டது.

    Advertisement

    இறுதியில் குமாருக்கு கிடைத்த தண்டனை

    இதற்கிடையில் குமார் செய்த துரோகம் குறித்து அறிந்த சக்திவேல், கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். குமாரை தேடி தோட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு தனியாக அமர்ந்து கொண்டிருந்த குமாரை பார்த்ததும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடித்து வெளுத்து வாங்குகிறார். இதுவரை அனைவரையும் ஏமாற்றி வந்த குமார், முதல் முறையாக தனது செயல்களின் விளைவை நேரடியாக சந்திக்கிறார்.

    ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம்

    அடுத்த எபிசோடில் என்ன நடக்கும்?

    முத்துவேல் போலீசில் புகார் கொடுக்க மறுத்திருந்தாலும், குமார் செய்த குற்றம் இத்துடன் முடிவுக்கு வருமா? சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் அவரை மன்னிப்பார்களா? அல்லது குமாரின் வாழ்க்கையில் இன்னும் பெரிய புயல் வீசப் போகிறதா? என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    Advertisement

    மொத்தத்தில் கதிரின் விடுதலை, குமாரின் முகமூடி கிழிந்தது, சக்திவேலின் கோபம் என இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடு முழுக்க முழுக்க பரபரப்பு, சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகளின் கலவையாக அமைந்தது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த உண்மை வெளிவந்ததால், சமூக வலைதளங்களிலும் இந்த எபிசோடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    The latest episode of Pandian Stores 2 delivered one of the biggest turning points in recent weeks as Kathir’s wrongful imprisonment finally came to an end.After falsely accusing Kathir of pushing Muthuvel and causing his injuries, Kumar had successfully convinced everyone, leading to Kathir’s arrest. While the Pandian family struggled with pain and uncertainty, Kumar lived in fear that the truth would eventually come out.As Muthuvel continued his recovery in the hospital, Kumar became increasingly nervous. Fearing that Muthuvel would regain consciousness and reveal the truth, he made a shocking decision. He secretly entered Muthuvel’s hospital room and attempted to remove the life-support equipment that was helping him breathe.However, his plan was interrupted when Shakthivel unexpectedly walked into the room and caught him red-handed. Although Kumar managed to leave the scene, his fear and guilt became impossible to hide.The real turning point came when police officers arrived at the hospital to record Muthuvel’s statement. When asked whether Kathir was responsible for the incident, Muthuvel firmly denied it and revealed the truth.In a shocking confession, he stated that Kumar was the person who had pushed him. The statement stunned everyone present, including Shakthivel, who had believed Kumar’s version of events.News of the revelation quickly spread through the family. Gomathi, Raji, and the others were devastated to learn that Kathir had been wrongly blamed. Emotional scenes followed as family members expressed regret for doubting him.