சென்னை: தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய திரைப்படத்தின் பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரியா பவானி சங்கர், "மக்களுடன் மீண்டும் வந்துவிட்டேன். கடவுள்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று சுவாரஸ்யமான கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த பதிவுடன், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் விக்ரம் குமார் மற்றும் படக்குழுவினரையும் டேக் செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர் நாக சைதன்யா, நடிகை பார்வதி திருவோத்து, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மூத்த நடிகர் நாகார்ஜுனா, கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இதனால் இந்த பட விழா தெலுங்கு திரையுலகிலும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. பூஜை விழா புகைப்படங்களில், எளிமையான உடையில் காணப்பட்ட பிரியா பவானி சங்கர், படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. பிரியா பவானி சங்கரின் கேப்ஷன்தான் தற்போது அதிகம் பேசப்படுகிறது. "Back with the people. The Gods have been informed" என்ற அவரது வரிகள், ஒரு புதிய பயணத்திற்கான உற்சாகத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிலர் இதை அவரது அடுத்த கட்ட சினிமா பயணத்தின் தொடக்கமாகவும், இன்னும் சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதற்கான குறியீடாகவும் பார்க்கின்றனர். 'மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறினார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், குடும்ப ரசிகர்களிடமும் தனி வரவேற்பை பெற்றுள்ளார். அதேபோல், வெப் சீரிஸ் மற்றும் ஓடிடி தளங்களிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். இந்த புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், நாக சைதன்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் விக்ரம் குமார் இயக்குவதால், படத்தின் கதைக்களம் மீதும் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பிரியா பவானி சங்கரின் பதிவுக்கு கீழ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் கலக்கப் போகிறீர்கள்", "தமிழ் ரசிகர்கள் உங்களை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறார்கள்", "நாக சைதன்யாவுடன் இந்த கூட்டணி சூப்பர் ஹிட் ஆகும்" என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு சாதாரண பூஜை விழா புகைப்படமாக தொடங்கிய இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிரியா பவானி சங்கரின் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.புதிய படத்திற்கு பூஜையுடன் தொடக்கம்
ஒரே மேடையில் 3 பிக் பாஸ் தொகுப்பாளர்கள்.. VJS பேச்சை கேட்டு மோகன்லால் ரியாக்ஷன்! ஷாக் ஆன நாக அர்ஜுனா
மீண்டும் மக்களுடன்
ரோபோ சங்கர் இறப்பதற்கு 10 நாளுக்கு முன்பு நடந்த சம்பவம்.. கடைசியாக நடித்த படத்திலும் அதே நிலைமை! பிரியங்கா உருக்கம்
தமிழில் இருந்து தெலுங்கு வரை
நாக சைதன்யாவுடன் முதல் கூட்டணி?
ரசிகர்கள் வாழ்த்து மழை