சென்னை: நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு நேரடியாக விளக்கம் அளித்து அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலானது.
அந்த பதிவில், "ஜூன் 11-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும்" என்று குறிப்பிட்டிருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. புதிய படம் குறித்த அறிவிப்பா? அரசியல் தொடர்பான முடிவா? அல்லது சமூக சேவை திட்டமா? என்ற கேள்விகள் தற்போது இணையத்தில் வலம் வருகின்றன.
இந்த பரபரப்புக்கு மத்தியில், ராகவா லாரன்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் குறித்து பேசிய வீடியோவை விஜய் ரசிகர்கள் மீண்டும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
அந்த பேட்டியில் ராகவா லாரன்ஸ் மிகவும் வெளிப்படையாக தனது நட்பை பற்றி பேசியிருந்தார். "எனக்கு சினிமாவில் பெரிய நண்பர்கள் யாரும் கிடையாது. நண்பன் என்று நான் சொல்லக்கூடியவர் விஜய் சார் மட்டும்தான். 'மேகமாய் வந்து போகிறேன்' பாடல் காலத்திலிருந்தே நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம்" என்று கூறியிருந்தார். விஜய் தன் மீது வைத்திருக்கும் அக்கறை குறித்து பேசும்போது லாரன்ஸ் நெகிழ்ச்சியடைந்தார். "என்னுடைய வாழ்க்கையில் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் எனக்கு வரும் முதல் போன் விஜய் சாரிடமிருந்துதான் இருக்கும். எனக்கு எங்காவது அடிபட்டால்கூட உடனே போன் பண்ணி, 'என்ன நண்பா... என்னாச்சு? கழுத்துல அடிபட்டுருக்காமே?' என்று அக்கறையோடு விசாரிப்பார்" என்று கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சினிமா உலகில் பலர் நட்பை வைத்து வாய்ப்புகளை கேட்பார்கள். ஆனால் தங்களது நட்பு அப்படி இல்லை என்று லாரன்ஸ் தெரிவித்திருந்தார். "நான் அவரிடம், 'என்னோட தயாரிப்பில் நடிக்கிறீங்களா?' அல்லது 'உங்களை வைத்து படம் எடுக்கட்டுமா?' என்று கேட்டதில்லை. அதேபோல் அவரும், 'நீங்க எனக்கு டான்ஸ் மாஸ்டரா வேலை செய்யணும்' என்று கேட்டதில்லை" என்று கூறினார். இதுவே அவர்களது நட்பின் தனித்துவம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பேட்டியில் அதிகம் கவனம் பெற்ற மற்றொரு விஷயம் விஜய்யின் குடும்பம் பற்றிய தகவல்தான். "ஒரு முறை அவருடைய மகன் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, 'என் மகன் உங்களுடைய ரசிகர்' என்று விஜய் சார் பெருமையாக சொன்னார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்று லாரன்ஸ் கூறியிருந்தார். இந்த ஒரு தகவலே தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், திருச்சி கிழக்கு பகுதியில் ராகவா லாரன்ஸ் தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் விளக்கம் அளித்திருந்தார். அதே நேரத்தில் ஜூன் 11-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சிலர் அது புதிய திரைப்பட அறிவிப்பாக இருக்கலாம் என கூற, சிலர் சமூக சேவை திட்டமாக இருக்கலாம் என கணித்து வருகின்றனர். ஒருபுறம் ஜூன் 11 அறிவிப்பு என்ன என்ற கேள்வி, மறுபுறம் விஜய் குறித்து லாரன்ஸ் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் என சமூக வலைதளங்களில் ராகவா லாரன்ஸ் பெயர் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. "நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்", "விஜய் - லாரன்ஸ் நட்பு வேற லெவல்", "பல வருடங்களாக வெளியில் தெரியாமல் இருந்த நட்பு இப்போது மீண்டும் பேசப்படுகிறது" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்போது அனைவரின் கவனமும் ஜூன் 11-ஆம் தேதியை நோக்கியே திரும்பியுள்ளது. அந்த நாளில் ராகவா லாரன்ஸ் என்ன அறிவிப்பு வெளியிடப் போகிறார்? என்ற கேள்விக்கான பதிலை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சினிமாவில் நண்பன்
முதல் கால் விஜய்யிடமிருந்து
நட்பை தொழிலோடு கலக்க மாட்டோம்
விஜய்யின் மகன் பற்றி சொன்ன விஷயம்
திருச்சி கிழக்கில் களமிறங்குகிறாரா லாரன்ஸ் மாஸ்டர்? ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு! அவரே வெளியிட்ட பதிவு
அரசியல் வதந்தி
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு