தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்


  • சென்னை: தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்று ராகவா லாரன்ஸ். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல், அரசியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விரைவில் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்றும், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    இந்த சூழலில், ஜூன் 11-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக லாரன்ஸ் அறிவித்திருப்பது மேலும் சஸ்பென்ஸை அதிகரித்துள்ளது.

    Advertisement

    லாரன்ஸ் சாதாரண நடிகர் இல்லை

    இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள வலைப்பேச்சு அந்தணன், லாரன்ஸின் மனிதநேய பணிகளை பற்றி பேசி இருக்கிறார் . "கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் மனுஷன் லாரன்ஸ். அவர் எப்படிப்பட்டவர் என்று புதிதாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், "ஜெய்பீம்" திரைப்படத்தின் உண்மைக் கதாநாயகியான பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து உதவிய சம்பவத்தையும் நினைவுபடுத்தியுள்ளார்.

    "நாங்க வலைப்பேச்சில் அந்த அம்மா பற்றிப் பேசிய உடனே லாரன்ஸ் என்னை தொடர்பு கொண்டார். 'அந்த அம்மாவை பார்க்கணும் சார்' என்று சொல்லி நேரில் சென்று இரண்டு லட்சம் ரூபாய் உதவி செய்ததோடு, அவருக்கு வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அதை நாங்கள் கண்முன்னே பார்த்திருக்கிறோம்" என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ரஜினிக்கு அனுமன் மாதிரி லாரன்ஸ்

    லாரன்ஸின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, அவரது ரஜினி பக்தியை தவிர்க்க முடியாது என்கிறார் அந்தணன். "ராமனுக்கு அனுமன் எப்படி இருந்தானோ, ரஜினிக்கு லாரன்ஸ் அப்படித்தான். ரஜினியை யாராவது விமர்சித்தால் முதலில் குரல் கொடுப்பவர் லாரன்ஸ். சீமான் ரஜினியை விமர்சித்தபோதும் வெளிப்படையாக எதிர்த்து பேசிய நடிகர் அவர்தான்" என்று கூறியுள்ளார்.

    உண்மையில், தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்திலிருந்தே ரஜினியை தனது குருவாகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் லாரன்ஸ் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

    விஜய்யை பாராட்டிய லாரன்ஸ்

    சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் குறித்து லாரன்ஸ் பேசிய கருத்துகளும் அப்போது வைரலானது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்ற லாரன்ஸ், "மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" என்று கூறியிருந்தார். மேலும் சினிமா துறையில் தனக்கு இருக்கும் ஒரே நண்பர் விஜய் தான் என்றும் பேசி இருந்தார். இதனால், தற்போது தவெகவுடன் லாரன்ஸ் இணையலாம் என்ற தகவல்களும் வேகமாக பரவி வருகின்றன.

    Advertisement

    இருப்பினும் இந்த விவகாரத்தில் லாரன்ஸ் இதுவரை நேரடி விளக்கம் அளிக்கவில்லை. இதுதான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தணன் கூறுகையில்,

    "திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை என்றோ, அல்லது போட்டியிடுகிறேன் என்றோ ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி சொல்லாமல் ஜூன் 11-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு என்கிறார். அதனால்தான் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை பக்கம்?

    மேலும், "தவெக தரப்பில் லாரன்ஸை களமிறக்கும் திட்டம் இல்லை என்று சில தகவல்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் அவர் அண்ணாமலை தரப்பில் இணையலாம் என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன" என்றும் அந்தணன் கூறியுள்ளார். ஆனால் இதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

    Advertisement
    திருச்சி கிழக்கில் களமிறங்குகிறாரா லாரன்ஸ் மாஸ்டர்? ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு! அவரே வெளியிட்ட பதிவு

    ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

    லாரன்ஸ் அரசியலுக்கு வருவாரா என்ற விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், ரசிகர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். "ஏழை மக்களுக்கு இவ்வளவு உதவி செய்கிறவர் அரசியலுக்கு வந்தால் நல்ல மாற்றம் வரும்" என சிலர் கூறுகின்றனர்.

    மற்றொரு தரப்பினர், "லாரன்ஸ் அரசியலுக்கு வரலாம். ஆனால் தனி கட்சி தொடங்க வேண்டாம். ஏற்கனவே மக்கள் நலன் குறித்து பேசும் ஒரு பெரிய அரசியல் அமைப்பில் சேர்ந்து பணியாற்றலாம்" என கருத்து தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    இன்னும் சிலர், "லாரன்ஸ் அரசியலுக்கு வந்தால் அது விஜய்க்கு பலமாக அமையும். இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஜூன் 11-ஆம் தேதி

    தற்போது அரசியல் வட்டாரங்களில் ஒரே கேள்வி தான். ராகவா லாரன்ஸ் தவெகவில் இணையப் போகிறாரா? அண்ணாமலையுடன் கைகோர்க்கிறாரா? அல்லது தனது சமூக சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய அமைப்பு ஒன்றை அறிவிக்கப் போகிறாரா? இந்த கேள்விகளுக்கான பதில் ஜூன் 11-ஆம் தேதி வெளியாகும் அவரது அறிவிப்பில் தெரியவரும். அதுவரை அரசியல் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரியான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    English Summary

    Actor, director, and philanthropist Raghava Lawrence has once again become the center of political speculation in Tamil Nadu after announcing that he will make an important declaration on June 11. The announcement has triggered widespread discussions about whether he is preparing to enter politics.Recent reports and social media discussions have suggested that Lawrence could contest from the Tiruchirappalli East constituency under the banner of TVK. However, no official confirmation has been provided so far, keeping the suspense alive among both cinema fans and political observers.Commenting on the developments, political commentator Antanan highlighted Lawrence's long-standing humanitarian work. He recalled how Lawrence had personally reached out after learning about Parvathi Ammal, the real-life inspiration behind the acclaimed film "Jai Bhim," and extended financial assistance while also promising support for housing.Antanan emphasized that Lawrence's commitment to helping people has earned him a strong reputation beyond cinema. According to him, Lawrence is one of the few celebrities who consistently engages in charitable activities without seeking publicity.